இனி நீங்க சைவம் அசைவம் என எதை சமைச்சாலும் இதுல ஒரு ஸ்பூன் மட்டும் போட்டு சமைச்சு பாருங்க வாசம் சும்மா பக்கத்து தெரு வரைக்கும் வீசும். இந்த தூள் ஒரு வருடம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் இருக்க இந்த சூப்பர் டிப்ஸையும் தெரிஞ்சிக்கோங்க.

kuzhambhu milagai thool
- Advertisement -

வீட்டிலே குழம்பு மிளகாய்த் தூள் அரைத்து பயன்படுத்துவதை இன்றளவு பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். என்ன தான் கடைகளில் விற்கும் மிளகாய்த் தூளை வாங்கி குழம்பு வைத்தாலும் வீட்டில் நம் கை பக்குவத்தில் அரைக்கும் இந்த குழம்பு மிளகாய்த்தூளிர்கான ருசியே தனி தான். இந்தத் தூளை பலரும் பல வகையில் அரைப்பார்கள். இப்போது இந்த வீட்டு குறிப்பு பதிவில் ஒரு அருமையான குழம்பு மிளகாய்த் தூளை எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்கள்:
மிளகாய் – 700 கிராம், தனியா 1 கிலோ, மிளகு – 50 கிராம், சீரகம் – 100 கிராம், வெந்தயம் – 25 கிராம், துவரம்பருப்பு -100 கிராம், கடலைப்பருப்பு -100 கிராம், பச்சரிசி -100 கிராம், விரலி மஞ்சள் – 150 கிராம்.

- Advertisement -

குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் முறை
இந்த குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான மசாலா பொருட்களை முதலில் நம்ம தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதை ஒரு முறை அரைத்து பிறகு ஒரு வருடம் வரை கூட நாம் வைத்து பயன்படுத்த முடியும் அதற்கு தரமான பொருட்களாக பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.

இப்போது வாங்கிய மசாலா பொருட்கள் அனைத்தையும் நல்ல வெயில் படும் இடத்தில் சுத்தம் செய்து பின் ஒரு பேப்பர் அல்லது துணி ஏதாவது ஒன்றை போட்டு 8 மணி நேரம் வரை காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காய வைத்த இந்த மசாலா பொருட்களில் மிளகாயை தவிர்த்து மற்ற அனைத்தையும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கருகாமல் வறுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் வறுக்கும் போது கொஞ்சம் கூட நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது வறுத்த பொருட்களை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு ஒரு சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் ஏதும் இல்லாமல் சுத்தமாக வெயிலில் காய வைத்து பிறகு அதில் இந்த மசாலா பொருட்களை போட்டு கடையில் கொடுத்து அரைத்து விடுங்கள்.

அரைத்து இந்த மசாலா பொருட்களை வீட்டிற்கு வந்ததும் வீட்டு நிழலில் பேப்பர் கொட்டி ஆற வைத்த பிறகு சுத்தமான சில்வர் டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். இந்த தோளில் ஒரே ஒரு துண்டு வசம்பை மட்டும் போட்டு விட்டால் போதும் ஒரு வருடம் ஆனாலும் தூளின் நிறம் மணம் எதுவும் மாறாதோடு பூச்சி வராது. தூளும் கட்டி படாமல் நன்றாக இருக்கும்.

- Advertisement -

அதே போல நீங்கள் தூளை பயன்படுத்தும் போது மொத்தமாக அரைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை பயன்படுத்துங்கள். மொத்தமாக அரைத்து இருக்கும் பாத்திரத்தை அடிக்கடி திறந்து மூடினாலும் அதன் மணம் காரம் அனைத்தும் போய் விடும்.

இதையும் படிக்கலாமே: கொசு தொல்லையா அப்படின்னா என்ன? இப்படி கேட்கும் அளவுக்கு கொசுவே உங்களை நெருங்காமல் இருக்க ஒரு சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக.

இந்த மசாலாவில் நாம் சோம்பு, பெருங்காயம், கடுகு எதையும் சேர்க்காத காரணத்தினால் இதை சைவம் அசைவம் வறுவல் பொரியல் என அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். அசைவம் சமைக்கும் பொழுது கொஞ்சமாக கரம் மசாலா பெருஞ்சீரக பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். சாம்பார் வைக்கும் போது கொஞ்சமாக பெருங்காய பொடி சேர்த்துக் கொண்டால் போதும். இந்த ஒரு பொடியை வைத்தே இனி எல்லா விதமான சமையலையும் செய்து அசத்தலாம்.

- Advertisement -