இனி நீங்க சைவம், அசைவம் எது சமைத்தாலும் இதுல ஒரு ஸ்பூன் சேர்த்து சமைச்சு பாருங்க, நீங்க சமைக்கிற வாசமே வீட்டில் உள்ளவர்களை சாப்பிட தூண்டும். அந்த அளவுக்கு உங்க சமையல் மணக்கும்.

kuzhambhu milagai thool
- Advertisement -

நீங்கள் என்ன தான் விதவிதமாக சமைத்தாலும் கூட ஏதாவது குறை இருப்பது போலவே உங்களுக்கு தோன்றினால், நீங்கள் சமைக்கும் பொருட்களுடன் இந்த மசாலைவை கொஞ்சம் சேர்த்து சமைத்து பாருங்க. அப்புறம் உங்க கைப்பக்குவம் யாருக்கும் வராதுன்னு உங்களை புகழுவாங்க. அந்த அளவிற்கு சுவையும் மணமும் தரக்கூடிய இந்த தூளை எப்படி அரைப்பது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

தனியாக -1 கிலோ, மிளகாய் -1 கிலோ, வெந்தயம் – 50 கிராம், மிளகு -50 கிராம், சீரகம் -100 கிராம், துவரம் பருப்பு – 100 கிராம், கொம்பு மஞ்சள் -50 கிராம், காய்ந்த கறிவேப்பிலை கொஞ்சம்.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பில் அடி கனமான ஒரு பேனை வைத்து முதலில் வெந்தயத்தை சேர்த்து கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் மசாலாக்களை வறுக்கும் போது அடுப்பை லோ ப்ளேமில் தான் இருக்க வேண்டும். ஹை ஃபிளைமில் இருந்தால் மசாலா வறுக்கும் போது அவை கருகி விடும் வாய்ப்பு அதிகம் அத்துடன் மசாலாவின் சுவையும் மாறி விடும்.

அதன் பிறகு மிளகு, சீரகம், தனியா, தூரம் பருப்பு, இப்படி ஒவ்வொன்றாக போட்டு தனித் தனியாக வறுத்து எடுத்து ஒரு பெரிய தட்டில் வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். மிளகாய், மஞ்சள் இரண்டையும் நல்ல வெயிலில் ஒரு நாள் காய வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் தூள் அதிகமாக கிடைக்கும் அது மட்டும் இன்றி அதிக நாள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

- Advertisement -

வெயில் இல்லாத சமயத்தில் மிளகாய் காய வைக்க முடியாது. அந்த சமயத்தில் இதே போல அடுப்பில் பெரிய பேனை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மிளகாய் சேர்த்து கருகி விடாமல் வறுத்துக் கொள்ளலாம். வறுக்கும் போது கொஞ்சம் கல் உப்பு போட்டு வறுத்து கொள்ளுங்கள். இதனால் மிளகாய் கருகாமல் இருக்கும் அதே நேரத்தில் மிளகாய் நெடியும் வராது.

இப்படி தனித் தனியாக வறுத்து நன்றாக ஆற வைத்து கடையில் கொடுத்து அரைத்து எடுத்து வந்த பிறகு, அதை பேப்பர் அல்லது தட்டில் கொட்டி நன்றாக ஆற விடுங்கள். கடையில் கொடுத்து அரைத்து தூளை அப்படியே எடுத்து வைக்க கூடாது . அரைத்த உடன் தூள் மிஷின் சூட்டில் இருக்கும் அதை அப்படியே எடுத்து வைக்கும் போது அதிலிருந்து நீர் விட்டு தூள் சீக்கிரம் கெட்டு விடும். எனவே அரைத்து வந்த பிறகு தூளை தனியாக கொட்டி ஆற வைத்து அதன் பிறகு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் ஆறு மாதமானால் கூட தூள் கெட்டுப் போகவே செய்யாது.

இதையும் படிக்கலாமே: கேரளா ஸ்டைல் கோதுமை பாயாசம் ருசிச்சி இருக்கீங்களா. இனிப்பும் சத்தும் நிறைந்த இந்த பாயாசத்தை ஒரு முறை ட்ரை பண்ணி பாத்தா பிறகு விடவே மாட்டீங்க.

அசைவ குழம்பு சமைத்தாலும் சரி, சைவ குழம்பு சமைத்தாலும் சரி இந்த ஒரு தூள் இருந்தால் போதும் இந்த தூள் மட்டும் இருந்தால் போதும் உங்க சமையலில் வேறு எந்த மசாலாவும் சேர்க்காமல் உங்கள் சமையல் மணக்கும். நீங்களும் ஒரு முறை இப்படி அரைச்சு பாருங்க.

- Advertisement -