குழந்தை வரம் பெற வழிபாடு செய்ய வேண்டிய அம்பாள்

amman5
- Advertisement -

செல்வங்களில் எல்லாம் மிகச்சிறந்த செல்வம் இந்த குழந்தை செல்வம். குழந்தை பாக்கியம் வேண்டி எத்தனையோ பேர் தவமாய் தவமிருக்கிறார்கள். பணம் செலவு செய்து மருத்துவரை அணுகி முயற்சி செய்தும், குழந்தை வரம் கிடைக்கவில்லை என்பவர்கள் ஒரு பக்கம். செலவு செய்வதற்கு எங்களிடம் பணம் காசு கிடையாது.

ஆனால், குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். இப்படி ஒரு குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் தம்பதியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சில பேருக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தையை திட்டி தீர்க்கின்றோம்.

- Advertisement -

தகாத வார்த்தைகளில் பேசுகின்றோம். ஆனால் ஒரு குழந்தை இல்லாதவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள், அந்த குழந்தையின் அருமை அவர்களுக்கு தெரியும். உங்க வீட்டில் குழந்தை செல்வங்கள் இருந்தால், அவர்களை தகாத வார்த்தை கொண்டு திட்டாதீங்க. குழந்தைகள் என்றால் சேட்டைகள் செய்யும். தவறு செய்யும்.

அதை சரியான முறையில் சொல்லிக் கொடுத்து திருத்த வேண்டிய வேலை பெற்றவர்கள் கையில் உள்ளது. சரி இப்போது பதிவுக்கு வருவோம். உங்களுக்கு குழந்தை பாக்கியம் தேவை. என்ன வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த ஒரு அறிய தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடு

உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் ஒரே ஒரு முறை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று, கையேந்தி குழந்தை வரம் கேளுங்கள். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். தம்பதி சரீரமாக செல்லுங்கள்.

இரண்டு பேரும் காமாட்சி அம்மனிடம் மனம் உருகி குழந்தை வரம் வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். அம்மா தாயே நீயே எனக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று கணவன் மனைவி இரண்டு பேரும் மனம் உருகி வேண்டுதலை வைத்து உரிமையோடு சண்டை போடுங்கள்.

- Advertisement -

முடிந்தால் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இந்த வேண்டுதலை வைத்து வர உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முடியாதவர்கள் ஒரு முறை மட்டும் வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

மற்ற வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தபடியே காஞ்சி காமாட்சி அம்மனின் புகைப்படத்துக்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரை குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை வைத்தால் உங்கள் வேண்டுதல் கூடிய சீக்கிரம் நிறைவேறும்.

இந்த வேண்டுதலுடன் உங்களுடைய கர்மா குறைய வேண்டும் என்பதற்காக இந்த ஒரு பரிகாரத்தையும் சேர்த்து செய்யுங்கள். குழந்தைகள் ஆசிரமங்கள் இருக்கிறது. பிறந்த குழந்தை தாய் தந்தை இல்லாமல் தவித்து வருகிறது. அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

ஆதரவற்ற படிக்கின்ற பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இப்படி பணம் காசு இல்லாமல் தாய் தந்தை இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்து வாருங்கள். எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் இந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரி சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நரசிம்மர் வழிபாடு

மேலே சொன்ன ஆன்மீக வழிபாட்டு முறையோடு சேர்த்து நீங்கள் செய்யும் இந்த உதவி உங்களுக்கு நிச்சயம் ஒரு சில நாட்களில் குழந்தை பாக்கியத்தை பெற்று தரும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -