குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் உயர்கல்வி தொடரவும் பெற்றோர்கள்அயராது உழைப்பதோடு இந்த எளிய பரிகாரத்தையும் செய்தால், உங்கள் பிள்ளைகள் வானாளவு உயர்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

kethu graduation lady
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய செல்வம். இந்த கல்வி செல்வத்தை பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளித்து வாழும் திறமையை பெற்று விடுவார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே தான் இப்போதெல்லாம் கல்வி என்பது எட்டாக்கனியான போதிலும் அரும்பாடு பட்டாவது அதை நம் பிள்ளைகளுக்கு தர வேண்டும் என்று பெற்றோர்கள் போராடுகிறார்கள்.

இந்த கல்விச் செல்வத்தை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பள்ளியில் சேர்த்து விடுவது என்பது கடமை என்றாலும் நீ கூட அவர்களுடைய மனமும் சிந்தனையும் ஒரு சேர செயல்பட்டால் தான் அவர்கள் படிக்கும் படிப்பு மனதில் நல்ல முறையில் பதிந்து அதன் மூலம் அவர்கள் அறிவுத்திறன் வளரும். இப்படி எல்லா குழந்தைகளுக்கும் அமைந்து விடாது. ஒரு சில குழந்தைகள் படிப்பில் எப்பொழுதும் மந்த புத்தியாகவே இருப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு மேற்படிப்பு தொடர்வதில்லை விருப்பம் இல்லாமல் இருக்கும். சில குழந்தைகள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். இவற்றையெல்லாம் சரி செய்யக் கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க
இது போல மந்த புத்திக்கும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் அப்படியே இருப்பதற்கும் கிரகநிலை மாற்றங்கள் ஒரு பெரும் காரணமாக சொல்லப்படுகிறது அந்த வகையில் கேது பகவானுடைய கோளாறுகள் தான் இது போல மந்த நிலைக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது அதை சரி செய்வதுக்கான பரிகாரம் தான் இது.

பரிகாரத்திற்கு நமக்கு கொள்ளு பயிறு தேவை. இது கேது பகவானுக்கு உகந்த தானியம் இது எனவே இந்த பெயரை கொண்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை கேது பகவானுக்கு உகந்த நாள் ஆகையால் அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு இல்லை என்றால் மற்ற நாட்களிலும் செய்யலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதல் நாளே உங்கள் குழந்தைகளின் கையால் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து உங்கள் கையில் கொடுக்க சொல்லுங்கள். இந்த கொள்ளு பயிரை நீங்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள் மறுநாள் காலையில் இந்த பயிரை கழுவி சுத்தம் செய்த பிறகு கொஞ்சமாக உப்பு சேர்த்து வேகவைத்த பிறகு அருகில் உள்ள ஆலயத்தில் பிரசாதமாக கொடுத்து விடலாம் அல்லது ஆலயத்திற்கு வருவோருக்கும் தானமாக கொடுக்கலாம்.

இதைப் போல கோவிலுக்கோ தானமாகவோ கொடுக்க முடியாது அல்லது அதற்கான வாய்ப்பில்லை என்பவர்கள் இப்படி ஊற வைத்த பயிரை இதைப் இப்படி ஊற வைத்த பயிரை வேக வைக்காமல் அடுத்த நான் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நீர் நிலைக்கு சென்று அங்கு இந்த பெயரை நீர்நிலைகளில் போட்டு விட வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகள் இந்த பயிரை உண்டாலும் இந்த பரிகாரத்திற்கான பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் அன்பிற்குரியவர்கள் உங்களிடம் கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறார்களா? இந்த இலையை வைத்துக்கொண்டு ஒரு மந்திரத்தை கூறினால் ஒரே வாரத்தில் அவர்களே உங்களைத் தேடி வந்து பேசி விடுவார்கள்.

குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையில் வாழ்வதை பார்ப்பதை தவிர பெற்றோர்களுக்கு வேறு எந்த ஒரு ஆசையும் பெரிதாக இருந்து விடாது. அதற்கு அடிப்படையே இந்த கல்வி தான் இதை சரியான முறையில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு அதிகம் உண்டு. அந்த வகையில் இந்த பரிகாரமும் அவர்களுடைய இந்த முன்னேற்றத்திற்கு ஒரு வகையில் துணை புரியும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் இதை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -