கடன் பணப் பிரச்சனை தீர பரிகாரம்

amavasai cash
- Advertisement -

அமாவாசை திதி என்றாலே அது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர் வழிபாடு செய்யக் கூடிய நாட்களில் ஒன்று. அது மட்டும் இன்றைய தினத்தில் நம் திருஷ்டி கழிப்பது போன்றவைகளையும் செய்யும் போது நல்ல பலனை கொடுக்கும். அதே போல இந்த அமாவாசை திதியில் சில பரிகாரங்களை செய்யும் போது அது கை மேல் பலன் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வந்திருக்கக் கூடிய அமாவாசை திதியில் நம்முடைய பண பிரச்சனை கடன் பிரச்சனை அனைத்தும் தீர எளிமையாக செய்யக் கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணப் பிரச்சனை கடன் பிரச்சனை தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை இன்று மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இன்று அமாவாசை துவங்கி நாளை மதியம் 3 மணியுடன் முடிந்து விடுகிறது. ஆனாலும் நாளை காலை தொடங்கும் நேரம் தான் அமாவாசை திதி இருப்பதால் இந்த பரிகாரத்தை இன்று மாலை தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய பித்தளை தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். தட்டு இல்லாத பட்சத்தில் வாழை இலை பயன்படுத்தலாம். அடுத்ததாக ஒரு புது அகலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். அதைப் போல் பச்சரிசியுடன் மஞ்சள் கலந்து அட்சதை தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் கொஞ்சம் மல்லிகை பூ. இந்த பரிகாரத்தை பூஜை அறையில் செய்ய வேண்டும் என்று ஹாலில் அமர்ந்தும் செய்யலாம். இப்போது நீங்கள் எடுத்து வைத்திருந்த தட்டி அட்சதையை தட்டின் மேல் கொட்டி பரப்பி விடுங்கள். அதன் மேல் மல்லிகை பூக்களையும் போட்டு விடுங்கள்.

அகலில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றி தட்டின் மேல் வைத்து விடுங்கள். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எரிய வேண்டும். இப்போது ஒரு சிறிய பேப்பரில் நீங்கள் யாருக்கு கடன் தர வேண்டுமோ, அவரின் பெயர், தொகை இரண்டையும் எழுதுங்கள். நீங்கள் எத்தனை பேரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அத்தனை பேரையும் எழுதுங்கள்.

- Advertisement -

அதே போல் நீங்கள் யாருக்கேனும் கொடுத்து உங்களுக்கு வராத பட்சத்தில் அந்த நபரின் பெயரையும் எழுதலாம். ஒரு வேளை இரண்டும் இருந்தால் இரண்டு பேப்பரில் தனித்தனியாக எழுதி தீபம் ஏரிந்து கொண்டிருக்கும் தட்டின் அடியில் வைத்து விடுங்கள். இப்படி வைத்த பிறகு கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இதை தனியாகவோ குடும்பத்துடனும் சேர்ந்தே சொல்லலாம். மந்திரம் சொல்லும் வேளையில் நீங்களும் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து தான் சொல்ல வேண்டும்.

மந்திரம்

ஓம் ரீங் வசி வசி பணம்
வசிய ஸ்வாஹ

இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரம் பணத்தை வசியம் செய்து பணம் இருப்பை நமக்கு அதிகரித்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு இந்த தீபத்தை குளிர விட்டு விட்டு அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இந்த பேப்பரை எடுத்து வீட்டிற்கு வெளியில் சென்று கொளுத்தி விடுங்கள்.

எரிந்து பிறகு எஞ்சிய துகளை கையில் எடுத்து அப்படியே ஊதி விடுங்கள் காற்றில் கலந்து விடும். பச்சரிசியை எறும்புகளுக்கு உணவாக வைத்து விடுங்கள். இந்த பரிகாரமானது உங்களிடம் வாங்கியவர் உங்களை தேடி திருப்பித் வந்து திருப்பி தரவும், நீங்களும் வாங்கிய கடனை திருப்பித் தரக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இது பணவரவு அதிகரித்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பணம் வீடு தேடி வர நிலை வாசல் முடிச்சு

பெண்கள் மாத விலக்காக இருப்பின் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். அதே போல் இந்த பரிகாரத்தை செய்ய முடிவு செய்து விட்டால் அசைவத்தை தவிர்த்து விடுவது நல்லது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -