குழந்தைகளின் ஞாபக சக்தி ஞானம் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிமையான வெற்றிலை பரிகாரம்.

betal leaf studying boy
- Advertisement -

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கான முயற்சியாக தான் இன்றைய காலத்தில் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் படிப்பில் மந்தமாக இருந்தால் அந்த வேதனையை சொல்ல முடியாது.

இதற்காக குழந்தைகள் படிக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா குழந்தைகளும் படிக்கத் தான் செய்கிறார்கள். சிலருக்கு ஞாபகத்தில் உடனே நின்று விடும். சிலருக்கு படித்தவுடன் மறந்து விடும். இதை சரி செய்வதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான ஒரு பொருள் சுரைக்காய் ஓடு. பண ஈர்ப்பை அதிகரிக்க சுரக்காய் குடுவை முறையை பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த பரிகாரத்திற்கு சுரக்காய் ஓடு தேவை. இந்த ஓட்டை வைத்து தான் நாம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த சுரக்காய் ஓடு கிராமப்புறங்களில் அலங பெரிய நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு வேளை எங்கும் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் கிடைப்பதாக தகவல் உள்ளது விசாரித்து பாருங்கள். இந்த சுரக்காய் ஓட்டை வாங்கி அதில் நம் உள்ளங்கை அளவில் உள்ள ஒரு துண்டை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஓட்டில் உங்களுடைய குழந்தையின் பெயர் பிறந்த நாள் ராசி நட்சத்திரம் போன்றவற்றை எல்லாம் எழுத வேண்டும். அதன் பிறகு ஐம் என்ற இந்த மந்திர வார்த்தையை மூன்று முறை தொடர்ச்சியாக எழுத வேண்டும். இப்படி எழுதிய இந்த ஓட்டை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை இரவு உறங்கும் முன்பாக இந்த ஓட்டை தலையணை அடியில் வைத்து உறங்க சொல்லுங்கள். இதை தினந்தோறும் செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்து இந்த ஓட்டை எடுத்துப் போட்டு விட்டு வேறு ஓடை இதே போல் எழுதி வைத்து விடுங்கள். நீங்கள் ஒரு முறை வாங்கிய சுரைக்காய் ஒட்டை நான்கு ஐந்து முறை இது போல எழுத பயன்படுத்தலாம்.

- Advertisement -

எங்கு தேடியும் சுரக்காய் ஓடு உங்களுக்கு கிடைக்காத பட்டத்தில் கரும்வெற்றிலையை பயன்படுத்தலாம். இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வெற்றிலை கிடையாது. கரும்பச்சை நிறத்தில் பெரிதாக இருக்கும். இந்த வெற்றிலையில் இதே போல எழுதி தலையணை அடியில் வையுங்கள். இது வதங்கியவுடன் வேறு மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு பொருளை விளக்கில் சேர்த்தாலே போதும்.

இந்த பரிகாரத்திற்கு முடிந்த வரையில் சுரைக்காய் ஒட்டை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அது தான் அதிக பலன்களை கொடுக்கும். நம் குழந்தைகள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர இது போன்ற சின்ன சின்ன பரிகாரங்களை செய்வதால் அவர்களின் முயற்சிக்கு இது பெரிதும் உதவும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -