வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு பொருளை விளக்கில் சேர்த்தாலே போதும்.

javvathu deepam
- Advertisement -

இந்து சமயத்தில் மட்டும் அல்லாமல் மற்ற பிற சமயங்களிலும் தீபம் என்ற ஒன்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் வருகிறது. அனைத்து சமயத்திலும் ஏதாவது ஒரு வகையில் தீபம் என்பது இடம்பெற தான் செய்யும். அப்படிப்பட்ட தீபத்தை நாம் முறையாக ஏற்றி வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தீபம் ஏற்றும் பொழுது எந்த பொருளை அதனுடன் சேர்த்து ஏற்றினால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

அனைவரின் இல்லங்களிலும் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். எந்த வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடப்படுகிறதோ அந்த வீட்டில் தெய்வத்தின் அம்சம் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பல மகத்துவங்களை பெற்ற தீபத்தில் எந்த பொருளை நாம் சேர்த்து ஏற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

- Advertisement -

விளக்கு என்று சொன்னதும் நமக்கு பல வகையான விளக்குகள் ஞாபகத்திற்கு வரும். அகல்விளக்கு, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, வெண்கல விளக்கு, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, அஷ்ட லட்சுமி விளக்கு என்று நாம் வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் எந்த எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுகிறோம் என்றும் எந்த திரியை போட்டு தீபம் ஏற்றுகிறோம் என்றும் சில குறிப்புகள் இருக்கின்றன.

ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் கடலை எண்ணெய் பயன்படுத்தி மட்டும் தீபம் ஏற்றக்கூடாது. அவ்வாறு ஏற்றினால் கடன் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மற்ற ஏனைய எண்ணெய்களை வீட்டில் உபயோகப்படுத்தி தீபம் ஏற்றலாம்.அதிலும் குறிப்பாக வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய், நெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நாம் ஏற்றும் தீபத்தில் எந்த திரியை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு அதன் மேல் சிறிதளவு ஜவ்வாது பொடியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தின் வெப்பமானது எண்ணைக்கு பரவி எண்ணெயில் இருக்கும் ஜவ்வாது ஆவியாகி நறுமணம் கமல ஆரம்பிக்கும். எந்த வீட்டில் நறுமணம் கமலுகிறதோ அந்த வீட்டில் தெய்வத்தின் சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு ஏற்றிய தீபத்திடம் நம்முடைய நியாயமான கோரிக்கை என்னவோ, வேண்டுதல் என்னவோ அதை மனதார முழு நம்பிக்கையுடன் கூற வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் அந்த தீபம் நம்முடைய வேண்டுதலையும், கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு அது நிறைவேற நமக்கு நல்ல வழியை காட்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த தீபத்தை நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாம் ஏற்றலாம். அவ்வாறு ஏற்றும்பொழுது முதல் நாள் ஏற்றிய எண்ணெய், திரியை மறுநாள் உபயோகப்படுத்த கூடாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. மறுநாள் விளக்கை சுத்தம் செய்துவிட்டு எண்ணெய், திரி, ஜவ்வாது மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி அந்த தீபத்திடம் நம்முடைய வேண்டுதலை கூற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய அற்புதமான வேர்

இந்த எளிமையான தீப வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது அனைத்து தெய்வங்களும் நமக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய நியாயமான கோரிக்கைகள் விரைவிலேயே நடைபெறும் என்பது உறுதி.

- Advertisement -