குழந்தைகள் நன்றாக படிக்க பரிகாரம்

sarawathi childrens
- Advertisement -

பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது தான். குழந்தை நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது கல்வி தான். அந்த கல்வியானது சரியாக ஒரு குழந்தைக்கு அமைந்து விட்டால், அவர்கள் வாழ்க்கையை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. கல்வியானது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான குழந்தைகள் கல்வியின் கவன குறைவாக இருக்கிறார்கள். சில குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். தேர்வு நேரத்தில் அனைத்தையும் மறந்து விடுவார்கள். சில குழந்தைகளுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருக்கும். இப்படி படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் கூட நன்றாக படிக்க எளிய பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குழந்தைகள் நன்றாக படிக்க பரிகாரம்

குழந்தைகளுக்கு ஞானத்தை தரக்கூடிய கடவுளாக நாம் பார்க்கப்படுபவர். புதபகவான் அடுத்து கல்வியை தரக்கூடிய கடவுளாக விளங்குவர். சரஸ்வதி தாயார் இந்த இருவரையும் முறையாக வகைப்பட்டவை குழந்தைகள் நல்ல ஞானத்தை பெற்று படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சரஸ்வதி தாயார் கையில் எப்போதும் வீணையுடனே இருப்பார். இது அனைவரும் அறிந்ததே. நம் குழந்தைகள் படிக்கும் அறையில் இது போன்றதொரு படத்தை எப்பொழுதும் மாட்டி வைக்க வேண்டும். சரஸ்வதி தாயாரின் படத்தை வைக்கவில்லை என்றாலும் வீணை படத்தை மாற்றி வைப்பது அங்கு ஒரு நல்ல ஆற்றலை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் சரஸ்வதி தாயார் படம் கட்டாயமாக இருக்க வேண்டும். அந்தப் படத்திற்கு தினமும் ஐந்து கல்கண்டை நெய்வேத்தியமாக வைத்து ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து விளக்கேற்றி உங்கள் குழந்தைகளை வழிபாடு செய்ய சொல்லுங்கள். அதன் பிறகு அந்த கற்கண்டையில் பிரசாதமாக குழந்தைகளுக்கு உண்ண சொல்லுங்கள்.

இந்த வழிபாட்டை தினமும் செய்ய முடியாதவர்கள் சரஸ்வதி தாயாருக்கான நட்சத்திரமாக அஸ்வினி நட்சத்திரம் கருதப்படுகிறது. அந்த நட்சத்திரம் வரும் நாளென்றாவது குழந்தைகளை இது போன்று வழிபாடு செய்து தாயாரை வணங்க சொல்லுங்கள். நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

- Advertisement -

இதே போல் புதன்கிழமையில் பச்சை பயிரை வேக வைத்து பெருமாள் கோவிலில் தானமாக கொடுக்க வேண்டும். அத்துடன் வீட்டில் பச்சைப்பயிறு செடியை ஒரு தொட்டியில் வளர்த்து குழந்தைகளை தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி வர செய்தால் இந்த செடி வளர்வது போல குழந்தைகள் கல்வி, ஞானம் பெற்று நல்ல முறையில் வளருவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு

குழந்தைகள் நன்றாக செய்ய கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பரிகார முறைகளை முடிந்த வரையில் குழந்தைளே செய்தால் பலன் அதிகமாக இருக்கும். சின்ன குழந்தைகள் செய்ய முடியாது எனும் பட்சத்தில் மட்டும் பெற்றோர்கள் செய்யலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -