இந்த மந்திரத்தை வாரத்தில் ஒரு நாள் உச்சரித்தால் குபேர சம்பத்து பெற்று செல்வ செழிப்புடன் வளமோடு வாழலாம்.

kuberar manthiram
- Advertisement -

நம் செயலுக்கு அப்பாற்பட்டு நமக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலும் கடவுளின் அருளால், அனுகிரகத்தால் நடக்கப்படுவதாகவே நாம் கருதுகிறோம். அவ்வாறு கடவுளின் அருளை பெறுவதற்கு நாம் பல வழிபாடுகளை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும், அந்த கடவுளுக்குரிய மந்திரத்தை நாம் கூறும் பொழுது அதன் பலன் நமக்கு மிகவும் அதிகமாகவே கிடைக்கிறது. அந்த வகையில் இன்று நாம் குபேரனுக்கு எந்த மந்திரத்தை எப்படி உச்சரித்தால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

செல்வ செழிப்புடன் வாழ ஆசைப்படும் ஒவ்வொரு நபரும் மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். நம்முடைய நன்மையும், தீமையும் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. என்னதான் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்தாலும், குபேரரின் அருளும் நமக்கு கிடைத்தால் தான் செல்வம் நிலைத்து இருக்கும். அவருக்கு அதிபதியாக விளங்கக் கூடியவர் தான் லஷ்மி தாயார்.

- Advertisement -

இவர்கள் இருவரையும் ஒருசேர யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்தவித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் நினைத்து நாம் எந்த நாளில் எந்த மந்திரத்தை எப்படி உச்சரித்தால் இருவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்பில் நாம் திளைப்போம் என்று பார்ப்போம் வாருங்கள்.

குபேரருக்கு வியாழக்கிழமையும், மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையும் உரிய கிழமையாக கருதப்படுகிறது. இருப்பினும் வெள்ளிக்கிழமை விடியற்காலையில் நாம் செய்யும் பூஜைகளை மகாலட்சுமி தாயார் மனதார ஏற்றுக் கொள்வார்கள். பலரால் விடியற்காலையில் பூஜை செய்ய முடியாது நிலை இருக்கும். மேலும் மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது யாருடைய குறுக்கீடும் இல்லாமல் மனம் அலைபாயாமல் நிலையாக இருந்து உச்சரித்தால் அதற்குரிய பலன் அபரிவிதமாக இருக்கும். அதனால் தான் மந்திரங்களை விடியற்காலைப் பொழுதில் எந்தவித இடையூறுகளும் இல்லாத நேரத்தில் உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள்.

- Advertisement -

மந்திரம்:
“ஓம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம”

வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்குள்ளாக நம் வீட்டு பூஜை அறையில் புதிதாக வாங்கி வந்த ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணையை ஊற்றி, அதில் பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை கிழக்கு நோக்கி வைத்து விட்டு, நாம் வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது நம் வீட்டில் சாம்பிராணி தூபம், ஊதுபத்தி போன்ற வாசனை மிகுந்த பொருட்களை பயன்படுத்தி வீடே வாசனையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: திருப்புகழில் இருக்கும் இந்த ஒரு பாடலை தினமும் பாடினால் போதுமே. முருகப்பெருமான் எந்த ரூபத்திலாவது உங்களுக்கு ஒரு நாள் காட்சி கொடுத்து விடுவார்.

இவ்வாறு நாம் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்தோம் என்றால் லட்சுமி குபேரர் அனுக்கிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, செல்வ செழிப்பில் நாம் மேலோங்கி நலமுடன் வாழ்வோம்.

- Advertisement -