வருமானம் மளமளவென உயர, பொருளாதாரம் ஏற்றம் காண, வீட்டில் தன வரவு குறைவில்லாமல் இருக்க 11 வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இந்த 1 பொருளை கொண்டு அர்சித்து பாருங்கள், எங்கு தேடியும் கிடைக்காது யோகம் வந்து சேரும்!

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

யோகம் என்பது எப்போது? யாருக்கு வரும்? என்பது தெரியாது. ஆனால் யோகத்தை இழுத்துக் கொண்டு வருவதற்கு சில பூஜை முறைகளை செய்தாலே போதும். எளிய இந்த பூஜை முறைகளை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதாரம் எப்பொழுதும் ஏற்றம் காணும். மேலும் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. எந்த ஒரு சூழ்நிலையிலும் எதையும் எதிர் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும். எங்கு தேடியும் கிடைக்காத யோகம் உங்களுக்கும் வர நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பூஜை முறை என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வீட்டில் வறுமை இல்லாமல் இருக்க, லட்சுமி குபேர, மகாலட்சுமி, குபேர பூஜைகள் செய்து வரலாம். இவர்களுக்கு இந்த ஒரு பொருளைக் கொண்டு அர்ச்சித்தால் அவர்கள் நமக்கு அள்ள அள்ள குறையாத செல்வத்தையும், பணத்தையும் கொடுப்பார்களாம். குறிப்பாக வெள்ளிக்கிழமை, வியாழன் கிழமைகளில் இது போல நீங்கள் செய்யும் பொழுது அதிர்ஷ்டம், யோகம் போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை நீங்கள் உணரலாம்.

- Advertisement -

அவ்வகையில் நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் 11 வாரங்கள் தொடர்ந்து மகாலட்சுமி படத்தை வைத்து இந்த ஒரு பொருளால் ஆர்ச்சிக்க வேண்டும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் உங்களிடம் இருந்தால் 108 நாணயங்களை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் எப்பொழுதும் நாணயங்களின் ஓசை கேட்டால் அங்கு பணம் தங்கு தடை இல்லாமல் வரும் என்கிற ஐதீகம் உண்டு.

பிறகு பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசியை எடுத்து அதை கொஞ்சம் மஞ்சள் கலந்து அட்சதை போல செய்து கொள்ளலாம், ஆனால் இந்த பச்சரிசியை நாம் பறவைகளுக்கு போட வேண்டும் என்பதால் நிறைய மஞ்சள் போடாமல் ஒரு சிட்டிகை மட்டும் மஞ்சள் போட்டு அட்சதை போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த அட்சதையில் 108 நாணயங்களையும் எப்பொழுதும் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பூஜையை ஆரம்பிக்கும் பொழுது பூஜை அறையை சுத்தம் செய்து மகாலட்சுமி படத்திற்கு வாசனை மிகுந்த மலர்களால் மாலை சூடுங்கள்.

- Advertisement -

சந்தனம், ஜவ்வாது கலந்து குங்கும பொட்டு வைத்து அலங்கறியுங்கள். சிறிய செம்பு கலசம் அல்லது பித்தளை கலசத்தில் நீரை நிரப்பி அதில் உதிரிப் பூக்களையும், பச்சை கற்பூரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது லட்சுமியை எங்கிருந்தாலும் நம்முடைய வீட்டிற்கு இழுத்துக் கொண்டு வந்து விடும். பின்னர் மகாலட்சுமியின் 108 போற்றிகளை உச்சரித்துக் கொண்டே மகாலட்சுமிக்கு நாணயத்துடன் கூடிய அட்சதையை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு போற்றி கூறும் பொழுதும் ஒவ்வொரு நாணயங்களுடன் சேர்த்து அட்சதையையும் எடுத்து படத்தின் முன்பு அர்ச்சனை செய்வது போல தூவ வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
பெண்கள் தங்கள் மனதில் நினைத்ததை சாதித்துக் கொள்ள, தினமும் இப்படி கோலம் போடுங்கள். இந்த கோலம் போடும்போது நீங்கள் என்ன நினைத்தாலும் அது உடனே நடக்கும்.

இப்படி 108 முறை உச்சரித்த பின்பு மனதார உங்களுடைய வருமானம் உயர வேண்டும், உங்கள் திறமைக்கு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மனம் உருகி வேண்டி கொள்ளுங்கள். இப்படி 11 வாரங்கள் தொடர்ந்து செய்த பின்பு நீங்கள் இந்த அரிசியை பறவைகளுக்கு தானமாக தூவி விடுங்கள். நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள். அவ்வளவுதான், இது போல நீங்கள் குபேரனுக்கும் வியாழன் கிழமையில் செய்யலாம். லட்சுமி குபேரன் படத்தை வைத்தும் செய்யலாம்.

- Advertisement -