கஷ்டங்கள் தீர சாந்த ஸ்வரூபினி காளி வழிபாடு

amman8
- Advertisement -

நாளை ஆங்கில மாதத்தின் முதல் தேதி பிறக்கவிருக்கின்றது. அது மட்டும் அல்லாமல், நாளைய தினம் அஷ்டமி திதியும் சேர்ந்து வருகின்றது‌. பொதுவாக அஷ்டமி திதி என்றால் கால பைரவருக்கு உகந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்தது தான். ஆனால் அஷ்டமி திதியில் தான் காளி தேவி அவதரித்தாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் உங்களுடைய கஷ்டங்கள் தீர வீட்டிலிருந்தபடியே செய்ய வேண்டிய காளி வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அஷ்டமியில் செய்ய வேண்டிய காளி வழிபாடு

காளி என்றதுமே கோபக்கார தெய்வம் என்ற ஞாபகம் தான் நமக்கு வரும். அப்படி கிடையாது. உண்மையான பக்தியோடு நேர்மையாக இருந்து, காளியை வழிபட்டால் அவள் ஒரு சாந்த ஸ்வரூபினியாக நமக்கு காட்சி தருவாள். நம்முடைய குடும்பத்தை காத்து ரட்சிப்பாள். வேண்டிய வரங்களை எல்லாம் உடனே அள்ளித் தரக்கூடிய தெய்வம் தான் காளி.

- Advertisement -

சரி கஷ்டங்கள் தீர நாளைய தினம் என்ன வழிபாடு செய்வது. நாளை மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யுங்கள். இதற்கு காளியின் திருவுருவப்படம் வீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மனை காளியாக நினைத்துக் கொள்ளலாம்.

அந்த அம்மனின் திருவுருவப்படத்திற்கு சிவப்பு பூக்களை போட வேண்டும். பிறகு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அம்மனுக்கு நெய் சாதம் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பச்சரிசி சாதம் வடித்து அதில் கொஞ்சமாக நெய்விட்டு உப்பு போட்டு கலந்து பிரசாதமாக வைத்து விடுங்கள். சாந்த சொரூபிணி காளிக்கு வைக்க உகந்த நெய்வேதியம் இதுதான்.

- Advertisement -

பிறகு பூஜையறையில் அமர்ந்து உங்கள் கஷ்டங்களை எல்லாம் காளியின் பாதத்தில் இறக்கி வைத்து விட்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்கவும். எண்ணிக்கை என்பது உங்கள் சௌகரியம் தான் 11 முறை, 27 முறை, 108 முறை கூட சொல்லலாம்.

காளி மந்திரம்

ஓம் காளி, ஜெய் காளி, ஓம் காளி, ஜெய்காளி,
ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!

- Advertisement -

பிறகு கற்பூர ஆராத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடுங்கள். இந்த வழிபாடு உங்கள் குடும்ப கஷ்டத்திற்கு நிச்சயமாக ஒரு தீர்வை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: 30-04-2024 திரி புஷ்கர யோகம்

குறிப்பாக எதிரி தொல்லை கொண்டவர்கள், கண் திருஷ்டியால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள், ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை சக்தியால் அவதிப்படும் குடும்பத்தினர் எல்லோரும் நாளை இந்த வழிபாட்டை செய்வது சிறப்பான பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -