இந்த அறிகுறிகள் உங்களுடைய உடம்பில் தெரிந்தால், நிச்சயமாக நீங்களும் அந்த மகாலட்சுமியின் ஸ்வரூபம் என்று தான் அர்த்தம்.

mahalakshmil
- Advertisement -

மகாலட்சுமியின் சொரூபம் என்று சொல்லப்படுபவர்கள் தான் பெண்கள். ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று சாமுத்ரிகா லட்சணத்தில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. அதில் சில குறிப்புகளில் மகா லட்சுமி அம்சம் பொருந்திய பெண் எப்படி இருப்பாள் என்பதை பற்றியும் சொல்லி வைத்துள்ளார்கள். அதில் ஒரு சில விஷயங்களைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய தேகத்தில், அங்கங்கள் இப்படி இருந்தால் நிச்சயமாக உங்களுக்குள் மகாலட்சுமி அம்சம் நிறைந்து இருக்கின்றது என்பதுதான் அர்த்தம். உங்களுக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இருக்கின்றது என்பதை உணர்த்தக் கூடிய அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

praying god

பொதுவாகவே சிவந்த நிறம் மகாலட்சுமி நிறமாக சொல்லப்படுகின்றது. மருதாணியின் சிவப்பு, குங்குமத்தின் சிவப்பு, தாமரையில் இருக்கக்கூடிய ஒருவித சிறப்பு, இவை அனைத்துமே மகாலட்சுமியின் அம்சம் கொண்டவை தான். காய்கறியில் கூட சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய காய்கறிகளை மகாலட்சுமிக்கு விருப்பமான காய்கறிகள் என்று சொல்லலாம். இதேபோல் சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளை பழம் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது.

- Advertisement -

இதில் நம் உடலில் ஓடக்கூடிய ரத்தமும் சிவப்பு தான். சாமுத்ரிகா லட்சணத்தின் படி ஒருவருடைய உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், நகக் கணுக்கள், கண்கள், உதடுகள், யார் யாருக்கு சிவப்பாக அழகாக இருக்கின்றதோ அவர்கள் எல்லோருமே மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் தான். இது ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள கருத்து.

women8

உடம்பில் இருக்கக்கூடிய இந்தப் பகுதிகள் அனைத்தும் சிவந்து இருக்க வேண்டுமென்றால், அந்தப் பெண் ஆரோக்கியம் நிறைந்த பெண்ணாக இருக்கவேண்டும். ஆரோக்கிய ரீதியாக பார்த்தால் இதுதான் உண்மை. யாருடைய உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கின்றதோ, அவர்களுடைய உள்ளங்கை உள்ளங்கால்கள் நகக்கணு உதடுகள் சிவப்பாக தான் இருக்கும்.

- Advertisement -

இரத்தத்திற்கு உரிய கிரகமாக சொல்லப்படுவது செவ்வாய் பகவான். அனுதினமும் செவ்வாய் பகவானை நினைத்து ஆரோக்கியமான பொருட்களை சாப்பிட்டு வந்தாலே நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படும். ஆரோக்கியமாக வாழலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் அல்லவா. நோய் நொடியற்ற ஆரோக்கியமான உடல் எப்போதும் அழகாகத்தான் இருக்கும். அழகாக இருக்கும் உடலில் மகாலட்சுமி குடி இருக்கத்தான் செய்வார்கள். (அழகு என்பது தேக அழகை குறிப்பிடுவது அல்ல. உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் குறிப்பது.)

women1

அக உங்களுடைய தேகத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொண்டு, உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்க கூடிய பொருட்களை சாப்பிட்டு, செழிப்போடு வாழ்ந்தாலே போதும். உங்களுடைய உடம்பில் அந்த மகா லக்ஷ்மி தேவி குடி கொண்டு விடுவாள். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியத்தையும் ஆன்மீகத்தையும் சேர்த்துதான் சொல்லி வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

mahalakshmi

கருப்பாக இருக்கும் எத்தனையோ பேருக்கு உள்ளங்கை உள்ளங்கால் கண்கள் உதடு சிவந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். வெள்ளையாக அழகாக இருப்பவர்களுக்கு, சில பேருக்கு உள்ளங்கை உள்ளங்கால் கண் உதடு சிவப்பு நிறத்தில் காணப்படாது. கவனித்து பாருங்கள். இனியாவது ஆரோக்கியமான உணவுப் பொருட்களை குறிப்பாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பழவகைகள் காய்கறிகள் அதிகமாக சாப்பிட்டு உங்களுடைய உள்ளங்கை உள்ளங்கால்கள் நக்கணும் உதடு இவைகளை எப்போதும் சிவப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். என்றைக்கும் மகாலட்சுமி உங்கள் தேகத்தோடு நிலைத்து நிற்பாள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -