மனக்குழப்பத்தை தீர்த்து வைக்கும் மாரியம்மன். அம்பாள் கோவிலுக்கு சென்று இதை மட்டும் செய்தால், உங்கள் மனசு உடனே லேசாகும்.

amman
- Advertisement -

மன குழப்பம், விரக்தி, மனதில் நிம்மதியே இல்லை என்ற சூழ்நிலை. மன சஞ்சலத்தோடு ஒருவரால் நிச்சயமாக தினம் தினம் நிம்மதியாக வாழ முடியாது. சில சமயங்களில் நம்மை அறியாமல் நம் மனது தடம் மாறி போகும். இந்த வாழ்க்கையை வாழ விரும்பாது. மன உளைச்சலில் தவறான முடிவை எடுக்க சொல்லும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கும். பெண்களுக்கும் இருக்கும். மனிதர்களுக்கு மனக்குழப்பம் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா. சந்திர பகவான் உங்களுடைய ஜாதக கட்டத்தில் சரியாக இல்லை என்பதுதான். ஒரு மனிதனுக்கு மனக்குழப்பம் வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம்தான். அது ஒன்றும் சரி செய்ய முடியாத வியாதி அல்ல.

இந்த சந்திரனை சரி செய்து கொள்ள மாரியம்மன் வழிபாடு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை அன்று மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்த பொருட்களை மாரியம்மன் கோவிலுக்கு வாங்கி செல்லுங்கள். அபிஷேகத்திற்கு பால், இளநீர், தேன் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அம்பாளுக்கு அலங்காரம் செய்ய அழகான புடவையை எடுத்துக் கொடுக்கலாம். வாசனை மிகுந்த பூக்களை வாங்கிக் கொடுக்கலாம்க். குறிப்பாக சிவப்பு செம்பருத்தி பூ வாங்கி கொடுப்பது சிறப்பு. அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்வதற்காக குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.  பெரும்பாலும் நிறைய அம்மன் கோவில்களில் பௌர்ணமி அன்று, இரவு பௌர்ணமி பூஜை நடக்கும். அந்த பூஜையில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அந்த பூஜைக்கு உங்களால் முடிந்த காணிக்கையை செலுத்த வேண்டும்.

- Advertisement -

பௌர்ணமி பூஜை அன்று உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து கொண்டு போய் அம்பாள் பாதங்களில் வைத்து, அர்ச்சனை செய்து அந்த நிவேதியத்தை உங்கள் கையால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். மேல் சொன்ன பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்து விடும். அம்மன் கோவிலுக்கு செய்யக்கூடிய பிரசாதத்தை கூடுமானவரை பச்சரிசியில் செய்வது சிறப்பு.

ஆண்கள் மன கஷ்டத்தில் இருந்து முழுமையாக வெளிவர அம்மன் கோவிலில் முடி இறக்கம் செய்யலாம். அதாவது அம்மன் கோவில்களுக்கு சென்று மொட்டை அடித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் எல்லாம் வேண்டுதல் வைத்து மொட்டை அடிப்பார்கள் அல்லவா. அதேபோல ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று உங்களுடைய முடியை காணிக்கையாக கொடுத்து விடுங்கள். உங்களுடைய மனசு ஒரு சில நாட்களில் தெளிவு பெறும் இது ஆண்களுக்கு.

- Advertisement -

முடி இறக்கம் செய்வது என்பது எல்லா பெண்களுக்கும் முடியாத காரியம். ஆகவே பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று பூ முடி கொடுப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா, அதுபோல கொடுக்கலாம். சில பேர் உச்சி முடியை காணிக்கையாக கொடுப்பார்கள். சில பேர் நுனி முடியை காணிக்கையாக கொடுப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பஞ்சமி திதி. வாராகி அம்மனுக்கு இந்த 5 இலைகளை வைத்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை நீங்கி செல்வ செழிப்பு பெருகும்.

உங்களுக்கு எது வழக்கமோ அது போல அம்மன் கோவிலுக்கு சென்று இப்படி முடி காணிக்கை செய்யுங்கள். மேல் சொன்ன பரிகாரங்களில் எது சௌகரியமாக இருக்கிறதோ அதை நீங்கள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கான மலக்குழப்பத்திலிருந்து சீக்கிரம் விடுபட முடியும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -