மன நிம்மதியை இழந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்.

murugan7
- Advertisement -

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரே ஒரு விஷயம், மன நிம்மதி தான். லட்சக்கணக்கில் பணம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் தவித்து வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வெறும் நூறு ரூபாயை மட்டும் சம்பாதித்து விட்டு மன நிம்மதியோடு வாழ்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் மன நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுபவர்களாக இருந்தால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக மட்டுமே.

மன நிம்மதியை மீட்டு தரும் முருகரின் பாடல் வரிகள்

ஒருமுறை மன நிம்மதியை இழந்த பக்தன் ஒருவன், கிருபானந்த வாரியாரிடம் தன்னுடைய பிரச்சனையை சொல்லி கஷ்டப்பட்டு இருக்கிறான். மன நிம்மதியை இழந்ததாகவும் சொல்லி இருக்கிறான். மனநிம்மதியை இழந்து வந்த தன்னுடைய சீடனுக்கு அவர் உபதேசம் செய்த பரிகாரம் தான் இது. துயர் துடைக்கும் ஆறுமுகனின் பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் வரிகள் இவை. எங்களைப் பெற்ற தாயாகவும், தந்தையாகவும் இருந்து என்னுடைய மனக்கவலையை தீர்த்து வை முருகா என்பது தான் இந்த வரிகளுக்கு உண்டான அர்த்தம்.

- Advertisement -

அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந் தனிலிருந்து கிருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

முருகப்பெருமானை வணங்கும்போது முருகப்பெருமான் நம்மை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் போது, முருகப்பெருமான் நம்மில் கலக்க வேண்டும் என்றால், நம்முடைய மனதில் எந்த ஒரு இடர்பாடும், துன்பமும், சந்தேகமும், அழுக்கும் இல்லாமல் இருக்க வேண்டும். தூய்மையான மனதில் தான் முருகப்பெருமான் குடி கொள்வான்.

- Advertisement -

எனவே மனதில் இருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லா வற்றையும் விளக்கி வைக்க அந்த முருகப்பெருமான் தான் அருள் ஆசியை வழங்க வேண்டும் என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இடம் பெற்றிருக்கும் இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, ஊதுபத்தி ஏற்றி, முருகப்பெருமானை வணங்கி இந்த இரண்டு பாடல்களையும் மனம் உருகி ஒரு முறை பாடி எனக்கு இருக்கும் துன்பங்கள் எல்லாம், இடர்பாடுகள் எல்லாம் என்னை விட்டு விலக வேண்டும் என்று மனம் உருக பிரார்த்தனை செய்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: கோடி நன்மைகள் தரும் கோமாதா பூஜை.

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் ஓடோடி விடும். மன நிம்மதி கிடைக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். எளிமையான வழிபாடு தான். சக்தி மிகுந்த வழிபாடு. மேலே சொல்லி இருக்கும் இந்த முருகன் வழிபாட்டை ஒரு சில நாட்கள் பின்பற்றினாலே உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களை உணருவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -