இந்த 1 எழுத்தினை உங்கள் வீட்டில் எழுதி வைத்தால் போதும். உங்கள் தலையெழுத்து மாறும். ஏழையாக இருக்கும் உங்கள் தலையெழுத்தை பணக்காரராக மாற்றும் அந்த குறியீடு என்ன?

cash
- Advertisement -

எந்த ஒரு விஷயத்தையும் நம் வீட்டில் தொடங்குவதற்கு முன்பாகவும், அந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடும் வழக்கம் நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதேபோல் மங்களகரமான சுபகாரிய நிகழ்விற்கு, குரு பகவானின் ஆசீர்வாதமும் நமக்கு மிக மிக முக்கியம். குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற விநாயகரின் ஆசீர்வாதத்தை பெற நம்முடைய வீட்டில் நாம் எந்த எழுத்தை, எந்த பொருளை கொண்டு எழுத வேண்டும். நீங்கள் தொடங்கப் போகும் எல்லா நல்ல விஷயங்களும், நல்லபடியாகவே நடக்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகார முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pillaiyar-suzhi

இந்த பரிகாரம் மிக மிக சுலபமான பரிகாரம். அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம். மனதார, உங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும். அந்த நல்லது அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். என்று அந்த விநாயகப் பெருமானை மனதார வேண்டிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள்தூளை போட்டு பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை உங்களுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு பூஜை அறையில் பிள்ளையார் சுழி போட வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவற்றில் பிள்ளையார் சுழி போட்டு வையுங்கள்.

pillaiyar-manai

மஞ்சளால் எழுதப்பட்ட இந்த பிள்ளையார் சுழி உங்களுடைய வீட்டிற்கு நிறைய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். மஞ்சள் என்பது குருவை குறிப்பது. பிள்ளையார் சுழி ஆனைமுகத்தான் விக்னங்களை தீர்க்கும் விநாயகரை குறிப்பது. இந்த இரண்டும் சேர்ந்த ஒரு முத்திரை உங்கள் வீட்டில் இருந்தால் அது உங்களுக்குப் மிகப் பெரிய நல்ல பலம் தரும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் சுவற்றில் இந்த குறியீட்டை போட முடியாமல் இருந்தால், ஒரு வெள்ளைக் காகிதத்தில் மஞ்சளில், பிள்ளையார் சுழி போட்டு பூஜை அறையில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். பூஜை அறையில் மட்டுமல்ல வரவேற்பறை குழந்தைகள் படிக்கும் அறை, சமையல் அறை போன்ற இடங்களிலும் இந்த குறியீட்டினை போட்டு வைத்துக் கொண்டால் அந்த இடத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொரு வேலைகளும் எந்த தடங்கலும் இல்லாமல் மிக மிக சிறப்பாக நடந்து முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

guru-bagavan

வருமானம் அதிகரிக்க தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடங்குவதற்கு முன்பும் இப்படி மஞ்சளால் கணக்கு எழுதும் புத்தகத்தில் பிள்ளையார் சுழி போடுவது மிகவும் நல்லது. ரூபாய் நோட்டு ஒன்றினை எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய வசதியைப் பொறுத்தது. 10 ரூபாய் நோட்டாக கூட இருக்கலாம். 500, 100 ரூபாய் நோட்டாகவும் இருக்கலாம். அதில் மஞ்சளில் பிள்ளையார் சுழி போட்டு விட்டு அந்த நோட்டை மடித்து உங்கள் வீட்டு பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள்.

cash

பீரோவில் பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் பிள்ளையார் சுழி போட்ட நோட்டை உங்களால் மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேல் சொன்ன சின்ன பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் நீங்கள் எதிர்பாராத பல நன்மைகள் உங்களை தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -