இந்த மூன்று பொருட்களை மந்திரம் உச்சரிக்கும் பொழுது பயன்படுத்தி பாருங்கள். மந்திர சித்தி உண்டாகி, அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தின் அருளும் முழுமையாக பெறுவீர்கள்.

manthiram
- Advertisement -

நாம் அனைவரும் ஏதாவது ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாகவோ அல்லது குலதெய்வமாகவோ நினைத்து வழிபடுவோம். எந்த தெய்வத்தை நாம் வழிபட்டாலும் அந்த தெய்வத்திற்குரிய மூல மந்திரத்தை உச்சரிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. மேலும் அந்த தெய்வங்களுக்குரிய பாடல்களையும் நாம் பாடுவோம். அந்த தெய்வத்தின் நினைப்பாலேயே நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவை அனைத்தையும் செய்வோம். அவ்வாறு நாம் செய்யும் பொழுது அந்த பாடலுக்கு உரிய பலனோ அல்லது மந்திரத்திற்கு உரிய பலனோ நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தினமும் நாம் விளக்கேற்றும் பொழுது சில மந்திரங்களை உச்சரிப்போம். தெய்வங்களை வணங்கும் பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறுவோம். நம் வேண்டுதல் நிறைவேறுவதற்காக சில மந்திரங்களை கூறுவோம். அவ்வாறு கூறும் பொழுது அந்த மந்திரம் நமக்கு முழு பலனை தர வேண்டும் என்றால் அதற்காக நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

- Advertisement -

மந்திரம் வெற்றி பெற நமக்கு சில பொருட்கள் தேவைப்படும். அவை ஒரு டம்ளர் தண்ணீர், விபூதி, இளநீர் மற்றும் கிராம்பு. முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் விபூதியை சிறிதளவு போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இளநீரை தனியாக ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு கிராம்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் நாம் பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் வைத்து கொள்ள வேண்டும்.

டம்ளரில் இருக்கும் விபூதி நீர் தெய்வத்தை ஈர்க்கக்கூடிய அற்புதமான நீராக திகழ்கிறது. நாம் எந்த பூஜையை செய்வதாக இருந்தாலும் இந்த நீர் கண்டிப்பாக நம் பூஜையில் இடம் பெற்றால் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நீரை நாம் தின பூஜையிலும் வைக்கலாம். தினமும் புதிதாக தண்ணீரை மாற்றிக் கொள்ள வேண்டும். பழைய விபூதி நீரை செடிகளில் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இளநீர். நாம் ஒரு மந்திரத்தை 108 முறை கூறுகிறோம் என்றால், அந்த மந்திரத்தின் அதிர்வலைகள் நம் உடம்பில் நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நாம் எந்த மந்திரத்தை கூறினாலும் கூறி முடித்த உடன் இந்த இளநீரை அருந்தினால் அந்த மந்திரத்தின் அதிர்வலைகள் நம்முள் நிரந்தரமாக நிலைத்திருக்கும். அப்படி நிலைத்திருந்தால் அந்த மந்திரத்தின் பலன் நமக்கு கிடைத்து விட்டதாகவே பொருள்படும்.

மூன்றாவது பொருள் தான் கிராம்பு. இந்த கிராம்பு ஈர்ப்பு சக்தி உடைய பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதனால்தான் நாம் கிராம்பை பணம் இருக்கும் இடத்திலும், நகை இருக்கும் இடத்திலும் வைக்கிறோம். இந்த கிராம்பை நாம் மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக வாயில் போட்டு ஒதுக்கி வைத்துக் கொண்டு மந்திரத்தை கூறினோம் என்றால், அந்த மந்திரத்தின் சக்தியும், கிராம்பின் சக்தியும் சேர்ந்து தெய்வத்தை நம்மிடம் ஈர்த்து வந்து சேர்க்கும். எந்த காரியத்திற்காக நாம் மந்திரத்தை உச்சரிக்கிறோமோ அந்த காரியம் நமக்கு விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மந்திரத்தை உச்சரித்த பிறகு இந்த கிராம்பை நாம் சாப்பிடலாம். விருப்பமில்லாதவர்கள் கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: நம்பிக்கையோடு 1 சொம்பு தண்ணீரை உங்க கையில் எடுங்கள். வெறும் 3 நாளில் வாங்கிய மொத்த கடனையும் திருப்பி தருவதற்கான வழியை அந்த தண்ணீர் காட்டிக் கொடுக்கும்.

இந்த அற்புதமான மூன்று பொருட்களை நாம் நம்முடைய பூஜைகளில் பயன்படுத்தி பூஜையில் கூறப்படும் மந்திரத்திற்கு உரிய முழு பலனையும் பெற்று வாழ்வில் சிறப்புடன் வாழ்வோம்.

- Advertisement -