நம்பிக்கையோடு 1 சொம்பு தண்ணீரை உங்க கையில் எடுங்கள். வெறும் 3 நாளில் வாங்கிய மொத்த கடனையும் திருப்பி தருவதற்கான வழியை அந்த தண்ணீர் காட்டிக் கொடுக்கும்.

kadan
- Advertisement -

அது எப்படி முடியும். ஒரு சொம்பு தண்ணீரால் நம்முடைய கடன் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க முடியுமா. நீங்கள் நம்பினால் நிச்சயம் முடியும். நம்பவில்லை என்றால், சமுத்திரம் நிரம்ப இருக்கும் தண்ணீரை எடித்துக் கொண்டு வந்தாலும், உங்கள் கடனை திருப்பித் தர முடியாது. நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இந்த ஒரு சொம்பு தண்ணீரை வைத்து எல்லா கடன் பிரச்சனையும் தீர்க்க முடியும் என்று முழுசாக நம்பி, பரிகாரத்தை செய்யுங்கள். ஏன் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை படிக்கவே தொடங்குங்கள். நம்பிக்கை இல்லை என்றால் பரிகாரம் நிச்சயம் பலிக்காது. அதேபோல பரிகாரத்தை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு, நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்களா அல்லது தேய்பிறையில் பிறந்தவர்களா என்பதையும் தெரிஞ்சி வச்சிக்கோங்க அது ரொம்ப முக்கியம்.

எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் அல்லாமல் வேறு ஏதாவது மன கஷ்டம், பணக்கஷ்டம் உங்களுக்கு இருக்குது என்றாலும் சரி, அதை சரி செய்ய இந்த பரிகாரத்தை செய்யலாம். எதற்காக கடன் என்று சொல்கிறோம் என்றால், இன்று உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு முக்கால்வாசி பேருக்கு பண பிரச்சனையும் கடன் பிரச்சனையும் தான் கழுத்தை நெரிக்கிறது. அதற்காகத்தான் தலைப்பில் அப்படி ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருக்கின்றோம். சரி, இப்போது பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

கோடி கடனையும் அடைக்க தண்ணீர் பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் தேவை அல்லவா. இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு செம்பு சொம்பு நிரம்ப தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளையும் ஏந்திய படி அந்த சொம்பு தண்ணீரும் உங்கள் கைகளில் இருக்கட்டும்.

குலதெய்வத்தை மனதார நினையுங்கள். என்னுடைய கடன் சுமையெல்லாம் தண்ணீரில் அடித்து செல்ல வேண்டும் என்று, இந்த சொம்பு தண்ணீரை நம்பிக்கையோடு பூஜை அறையில் குல தெய்வத்தை வேண்டி வைத்து விடுங்கள். மறுநாள் காலை கண்விழித்து, காலை கடனை முடித்து, பல் தேய்த்துக் கொள்வீர்கள். அடுத்து குளிக்க கூடிய வேலை.

- Advertisement -

நீங்கள் குளிக்கின்ற தண்ணீரை பக்கெட்டில் பிடிச்சுக்கோங்க. அது சுடுதண்ணி அல்லது பச்சை தண்ணி எதுவாக இருக்கட்டும். அந்த தண்ணீரில், பூஜை அறையில் வைத்திருக்கும் சொம்பு தண்ணீரை கொண்டு போய் கொட்டி கலந்திடுங்க. இந்த தண்ணீரில் குளிக்கலாம்‌‌. ஆனால், இதில் ஒரு சூட்சமம் அடங்கியுள்ளது. இந்த பரிகாரத்தை எல்லாம் செய்வதற்கு முன்பு நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்களா, அல்லது தேய்பிறையில் பிறந்தவர்களா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்களாக இருந்தால் பக்கெட்டில் இருந்து தண்ணீரை எடுத்து உங்களுடைய வலது தோள்பட்டையில் முதலில் ஊற்ற வேண்டும். நீங்கள் தேய்பிறையில் பிறந்தவர்களாக இருந்தால் தண்ணீரை எடுத்து முதலில் உங்களுடைய இடது தோள்பட்டையில் ஊற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தாங்க முடியத வலி, வேதனையில் நோய் நொடியில் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால், வந்த நோய், வந்த வழியே திரும்பிச் செல்லும். தீராத நோய் தீர, மகா பெரியவா தன் பக்தனுக்கு உபதேசம் செய்த மந்திரம்.

இப்படி தண்ணீரை உங்கள் மேல் ஊற்றும் போது உங்கள் கடன் சுமையெல்லாம் உங்களை விட்டு அந்த தண்ணீரில், உடம்பு வழியாக அப்படியே கீழே இறங்கிவிட்டது என்று மனதார நினைக்க வேண்டும். நிச்சயமாக முழு நம்பிக்கையோடு மூன்று நாள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் கடன் சுமை குறைவதற்கு ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சமும், உங்கள் வீட்டு தெய்வமும் காட்டிக் கொடுக்கும். நம்பிக்கை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கொடுக்காது. கடன் சுமை கொண்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.  நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -