மந்திரமும் வழிபாடும் அதிக பலன் தர

manthiram valipadu
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் தெய்வீக சக்தி என்பது நிறைந்திருந்தால் அவர்களுக்கு எந்தவித தீய சக்திகளும் அணுகாது என்றுதான் கூற வேண்டும். மேலும் காரிய தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றிக்கு மேல் வெற்றி பெறுவதற்கும் அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கும் நமக்கு சில வழிபாட்டு முறைகளும் மந்திர உச்சாடல்களும் உதவி புரிகின்றன. அந்த வழிப்பாட்டு முறைகளும் மந்திர உச்சாடலும் நமக்கு அதிக பலனை தர வேண்டும் என்றால் எந்த நாளில் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய அன்றாட வாழ்வில் தெய்வீக பணி என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. காலையில் எழுந்ததும் நம்மை அறியாமலேயே கடவுளின் பெயரை நாம் உச்சரிப்போம். அதேபோல் காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். விசேஷகரமான நாட்களாக இருக்கும் பொழுது கூடுதலாக பூஜை முறைகளை செய்வோம். விரத நாட்களில் விரதம் இருந்து தெய்வங்களை வழிபாடு செய்வோம். குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபாடு செய்வோம். இப்படி பல வகைகளில் நம்முடைய அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு ரூபத்தில் தெய்வீக செயல்பாடுகளில் நாம் ஈடுபடுவது உண்டு.

- Advertisement -

இன்னும் சிலரோ தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஆலய வழிபாட்டையும், பரிகாரங்களையும், மந்திரங்களை கூறுவது என்ற ஆன்மீக செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு மந்திரத்தையும் அல்லது வழிபாட்டு முறையோ அதன் பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால் மனதில் எந்தவித அப்பலுக்கும் இல்லாமல் சுத்தமான மனதுடன் முழு நம்பிக்கையுடன் அந்த செயலில் நாம் ஈடுபட வேண்டும். அதையும் தவிர்த்து சில குறிப்பிட்ட நாட்களில் நாம் செய்யும் வழிபாட்டு முறைகளும் பூஜை முறைகளும் மந்திர உச்சாடல்களும் நமக்கு பல மடங்கு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.

தினமும் நாம் செய்யக்கூடிய தெய்வீக செயல்பாட்டை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்தால் மற்ற நேரங்களில் செய்வதை விட அதிகமான அளவு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது அனைவரும் அறிந்த உண்மையே. அதையும் தவிர்த்து வியாழக்கிழமையில் நாம் மேற்கொள்ளக்கூடிய வழிப்பாட்டு முறைகளும் மந்திர உச்சாடல்களும் நமக்கு அதிக பலனைத் தரும்.

- Advertisement -

வியாழக்கிழமையோடு உத்திராட நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் நாம் ஒருமுறை ஒரு மந்திரத்தை கூறினால் அது ஒரு லட்சம் முறை கூறியதற்கு சமமாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அதிகளவு பலனை நம்மால் பெற முடியும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டிலும் வழிபடலாம்.

அன்றைய தினம் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜை அறையில் இருக்கக்கூடிய இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தின் படத்தையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தீபம் ஏற்றி வைத்து அவர்களின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் உச்சரிப்பதற்குரிய பலனை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சனையை தீர்க்க முத்தான 3 பரிகாரங்கள்

இந்த நட்சத்திரத்தையும் அதற்குரிய கிழமையையும் நம் முறையாக பயன்படுத்தி நமக்கு கிடைக்கக்கூடிய நற்பலன்களை விரைவில் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -