மார்கழி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

kolam
- Advertisement -

அடுத்த ஒரு வாரத்தில் மார்கழி மாதமே முடிவடைய போகின்றது. இந்த நேரத்தில் மார்கழி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திர வரிகளா? என்று எல்லோரும் சிந்திக்கலாம். சில பேருக்கு மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து இறை வழிபாடு செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருக்கும். சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

உங்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தாலும் சரி, அது உங்களுடைய பாக்கியம். ஒருவேளை வழிபாடு செய்ய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், இந்த 1 மந்திரத்தை இந்த மார்கழி மாதம் முடிவதற்குள், ஒரே ஒரு நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சொல்லி இறைவனை வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபாடு செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த ஒரு மந்திரம் என்ன அதை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கஷ்டம் தீர மார்கழி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

கஷ்டம் தீர மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நேரத்தில் தினமும் இறைவழிபாடு செய்வது நல்லது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு தீராத கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா.  இன்னும் ஒரு சில நாட்கள் மார்கழி மாதத்தில் மீதம் இருக்கிறது. இதிலிருந்து ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக்கோங்க. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கஷ்டப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றங்கள். நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வையுங்கள். வழக்கம் போல வாசல் தெளித்து அழகாக கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முடிந்தால் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும், இந்த பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்த பலனை தரும். பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த பிரசாதத்தை இறைவனுக்கு வைத்து பூஜை அறையில் அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய
ஓம் நம சிவாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய

- Advertisement -

இது ஒரு எளிமையான பஜனை பாடல் வரிகள் தான். பஜனை பாடல் பாடும் போது இந்த மந்திரத்தை பாடலாக ராகத்தோடு பாடுவார்கள். உங்களுக்கு இந்த மந்திரத்தை எப்படி சொல்ல வருமோ, அந்த முறையில் சொல்லுங்கள். தவறு ஒன்றும் கிடையாது. அந்த நாராயணரையும், சிவபெருமானையும் சேர்த்து வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மகா பெரியவா ஆசிர்வாதங்களை பெற மந்திரம்

இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தீராத கஷ்டங்கள் துயரங்கள் துன்பங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம்.

- Advertisement -