மார்கழி மாத பிரதோஷ நேரத்தை யாரும் தவற விடாதீங்க. இன்று இந்த 1 வார்த்தையை சொன்னால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாக பறந்து போகும். இக்கட்டான சூழ்நிலை கூட இன்பமாய் மாறும்.

Sivan-Manthiram (1)
- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட புதன்கிழமை அன்று, மார்கழி மாதத்தில் வந்திருக்கக் கூடிய இந்த பிரதோஷ நாளை யாரும் தவற விடாதீங்க. இன்றைய தினம் அதாவது 21-12-2022 ஆம் தேதி பிரதோஷம் வந்திருக்கின்றது. இன்று மாலை பிரதோஷ நேரமான 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் நாம் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை பற்றியும், அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மிக மிக எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாடு. இந்த வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்க்கையில் ஒரு பெரிய மற்றும் நிச்சயம் நிகழும். அந்த மாற்றம் உங்களுக்கு பெரிய அளவில் நல்லதை கொடுக்கும்.

மார்கழி மாத பிரதோஷ வழிபாடு
இன்று காலையிலிருந்து விரதம் இருப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். விரதமே இல்லை எனக்கு இன்று பிரதோஷம் என்று, இப்போதுதான் தெரிந்தது என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மாலை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். செல்லும்போது சிவனுக்கு வில்வ இலைகளை உங்கள் கையால் மாலையாக கட்டி போடுங்கள். உதிரி உதிரியாக இருக்கும் புஷ்பங்களை அப்படியே கொண்டு போய் போட வேண்டாம். மாலையாக உங்கள் கையால் வேண்டுதல் வைத்து, தொடுத்து போடக்கூடிய பூக்களுக்கு சக்தி அதிகம்.

- Advertisement -

அடுத்து உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை சிவனுக்கு வாங்கிக் கொள்ளலாம். சிவனுக்கு அபிஷேகம் நடக்கக்கூடிய அந்த சமயத்தில் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை இருக்கக்கூடிய அந்த சமயத்தில் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி சிவபெருமானை மனதில் நினைத்து, ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். கண்களை மூடி தான் அமர்ந்திருப்பீர்கள். ஆனால் அந்த சிவபெருமான் உங்கள் கண்களுக்குள்ளும், உங்கள் மனதிற்குள்ளும் காட்சி தர வேண்டும். உங்களுடைய எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி எம்பெருமானின் மீது வைக்க வேண்டும்.

இந்த நமசிவாய மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய கோரிக்கைகளை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். தற்சமயம் உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவை. கடன் பிரச்சனை இருக்கிறதா, நல்ல வேலை கிடைக்க வேண்டுமா, நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டுமா, அல்லது குழந்தை பாக்கியம் வேண்டுமா, அல்லது நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டுமா ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் வைத்து சிவன் கோவிலில் அமர்ந்து இந்த நாமத்தை சொல்லும் போது நிச்சயமாக நீங்கள் கேட்ட வரம் உடனே கிடைக்கும்.

- Advertisement -

கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சிவபெருமானை மனதார நினைத்து பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து இதே ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 1008 முறை சொல்லலாம். ஆனால் அந்த பிரதோஷ காலமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த மந்திரத்தை சொல்லி முடித்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விளக்கேற்றும் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு விளக்கு ஏற்றினால், வீட்டிற்குள் மகாலட்சுமி அம்சம் எப்போதும் நிறைவாக இருக்கும்.

ஆத்மார்த்தமாக இந்த வழிபாட்டை இன்றைய தினம் நீங்கள் செய்யும் போது எம்பெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற முடியும். மார்கழி மாதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதம். இந்த மாதம் வந்திருக்கக்கூடிய இந்த பிரதோஷ நாளையும் பிரதோஷ நேரத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால், வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் இவைகளில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கக்கூடிய சக்தியை அந்த இறைவன் நமக்கு கொடுப்பார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -