விளக்கேற்றும் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு விளக்கு ஏற்றினால், வீட்டிற்குள் மகாலட்சுமி அம்சம் எப்போதும் நிறைவாக இருக்கும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

மகாலட்சுமி ஆசிர்வாதம் என்பது கட்டாயம் எல்லோருக்கும் தேவை. அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை, பரிபூரணமாக பெறுவதற்கு வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான ஒரு தீப வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் உங்களுடைய வீட்டுக்கு கூடுதலாக நேர்மறை ஆற்றல் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திரம் வறுமை விரட்டி அடிக்கப்படும். அதிலும் குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில், விளக்கு ஏற்றும் போது, அந்த வழிபாட்டை இன்னும் சிறப்பாக மாற்ற இந்த ஆன்மீக குறிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற விளக்கு ஏற்றும் முறை
விளக்கேற்றும் எண்ணெய்க்கு சுத்தமான நல்லெண்ணெயாக வாங்கிக் கொள்ளுங்கள். நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்தக்கூடிய தரத்தில் இருக்கும் எண்ணெயை தான் விளக்கு ஏற்றவும் பயன்படுத்த வேண்டும். நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் விலை அதிகமாக இருக்கும். பூஜை அறையில் இறைவனுக்காக விளக்கு ஏற்ற பயன்படுத்தும் நல்லெண்ணெய் விலை குறைவாக இருக்கும். இப்படி தரம் பிரித்து இரண்டாவது தரத்தில் இருக்கும் எண்ணெயை வாங்கி இறைவனுக்காக பூஜை அறையில் விளக்கு போடாதீங்க.

- Advertisement -

நாம் சாப்பிட பயன்படுத்தக்கூடிய தரமான எண்ணெயை வாங்கி தனியாக பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அந்த எண்ணெயில் தான் இறைவனுக்கு விளக்கேற்ற வேண்டும். இறைவனுக்காக விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெயில், கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்ளுங்கள். இந்த பச்சைக் கற்பூரம் கலந்த நல்லெண்ணெயை விளக்கில் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த எண்ணெயை காமாட்சியம்மன் விளக்கிலும் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

விளக்கில் போடப்படும் திரியில் ஜவ்வாது பூசி தயார் செய்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் ஜவ்வாது கிடைக்கும். நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய இறையருள் நிறைந்த, வாசம் நிறைந்த பொருள் இது. அந்த ஜவ்வாதை திரியில் முழுவதும் பூசி விட்டு, அந்த திரியை விளக்கில் ஊற்றி இருக்கும் எண்ணெயில் போட்டு தீபம் ஏற்றினால் உங்களுடைய வீடு அவ்வளவு நறுமணத்துடன் இருக்கும்.

- Advertisement -

வாசம் நிறைந்த பொருட்கள் எல்லாமே சுக்கிரனுக்கு உரியது. மகாலட்சுமியின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றால் இந்த சுக்கிர பகவானின் கடைக்கண் பார்வையும் நம்மேல் விழ வேண்டும். இப்படி தினம் தோறும் தொடர்ந்து இந்த பச்சை கற்பூரம் கலந்த நல்லெண்ணெய் வாசமும் ஜவ்வாது வாசமும், உங்கள் பூஜை அறையில் உங்கள் வீட்டில் நிறைந்திருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றலே தங்காது. மகாலட்சுமி எந்த ஒரு சஞ்சலமும் இல்லாமல் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து நிரந்தரமாக அமர்ந்து கொள்வாள்.

இதையும் படிக்கலாமே: இதை தவறாமல் செய்யும் பெண்களிடம் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்களே தடுத்தாலும் தங்கம் வாங்கும் யோகம் உங்களை தேடி வரும்.

தினமும் இப்படி விளக்கு ஏற்றலாம். முடியாதவர்கள் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் ஏற்றலாம். குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் ஒருநாள் அதிகாலை வேலை, மேல் சொன்ன முறைப்படி விளக்கு ஏற்றிப் பாருங்கள். உங்களுக்கே ஏற்படக்கூடிய மனநிறைவை வார்த்தையால் சொல்ல முடியாது. அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -