இந்த விஷயம் மட்டும் தெரிந்தால், இன்னைக்கே இந்த செடியை கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலில் நட்டு வளர்க்க தொடங்கி விடுவீர்கள்.

maruthani-lakshmi
- Advertisement -

மகாலட்சுமியும் இந்த செடியும் வேறு வேறு அல்ல. மகாலட்சுமியின் சொரூபமே இந்த செடிதான். அது எந்த செடி என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மருதாணி செடி தாங்க அந்த செடி. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் அப்படி என்ன பெரிய நன்மை நடக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த செடியை நீங்கள் வீட்டில் வளர்த்த நாள் முதலே உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க தொடங்கிவிடும். சில கிராமப்புறங்களில் பார்த்தீர்கள் என்றால் நன்றாக தெரியும். எல்லோர் வீட்டு வாசலிலும் இந்த மருதாணி செடி இருக்கும்.

நம்முடைய வீட்டில் வளர்க்கும் மருதாணி செடியை எப்படி பராமரிக்க வேண்டும். இந்த மருதாணி செடியில் இருந்து வரக்கூடிய பூவை என்ன செய்தால் மகாலட்சுமியின் அருளாசியை முழுமையாக பெறலாம் என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மகாலட்சுமி அம்சம் பொருத்திய மருதாணி செடி வளர்ப்பு:
எல்லார் வீட்டு வாசலிலும் இந்த மகாலட்சுமி அம்சம் பொருந்திய மருதாணி செடியை வைத்து வளர்க்கலாம். தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து இதை வளர்த்து வாருங்கள். பெண் பிள்ளைகள் கேட்டால் இந்த மருதாணி இலைகளை அவர்களுக்கு பறித்துக் கொடுக்கலாம். நீங்கள் கொடுத்த மருதாணி இலையை அரைத்து அந்த பெண் பிள்ளைகள் கையில் வைத்து மனது சந்தோஷம் அடைந்தால், அந்த மகாலட்சுமி தாயே சந்தோஷமடைந்ததற்கு சமம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இந்த மருதாணி இலைகளை பிறருக்கு கொடுக்கக் கூடாது. விளக்கு வைத்து இந்த மருதாணி இலைகளை வீட்டில் இருந்து அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

இப்போது நீங்கள் ஒருவர் வீட்டில் இருந்து மருதாணி செடியை பறித்துக் கொண்டு வருவதாக இருந்தால், வெள்ளி செவ்வாய் கிழமைகளில் போய் அந்த இலைகளை கொண்டு வராதீங்க. விளக்கேற்றி அடுத்தவர் வீட்டில் இருந்து மருதாணி இலையை உங்கள் வீட்டுக்கு கொண்டு வராதீங்க. மருதாணி செடி வைத்திருப்பவர்களுடைய, கையில் ஒரு ரூபாயோ அல்லது ஐந்து ரூபாயோ கொடுத்துவிட்டு அவர்களுடைய வீட்டிலிருந்து மருதாணி இலைகளை பறித்து வருவது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

இந்த மருதாணி செடியில் மருதாணி பூக்கள் பூக்கும். அந்த பூக்களை பறித்து உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு சூட்டினால் மனம் குளிர்ந்து, அந்த மகாலட்சுமி உங்களுக்கு வரங்களை வாரி வழங்கி விடுவாள். இந்த மருதாணி பூவை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால், மகாலட்சுமிக்கு உங்கள் வீட்டில் இருந்து வெளியேற மனசே இருக்காது. கொஞ்சம் மருதாணி பூவை எடுத்து நிலை வாசலில் வைத்தால் நிலை வாசலில் இருக்கும் குலதெய்வமும் வாஸ்து தேவதைகளும் மனம் மகிழ்ந்து உங்களுக்கான வரங்களை கொடுத்து விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த வெயில் காலத்தில் கூட வெற்றிலைக் கொடியில் ஒரு இலை கூட வாடாம நல்ல தள தளன்னு வளர கீழே ஊத்துற இந்த தண்ணில ஒரு கிளாஸ் மட்டும் ஊத்துனா போதும்.

இந்த மருதாணி இலைகளை பறித்து வீட்டில் இருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று கையில் இட்டுக் கொண்டால், அவர்களுக்கு ஐஸ்வர்யம் பெருகும். மருதாணி இட்ட கையால் நீங்கள் கொடுக்கும் தானம் உங்களுக்கு பல மடங்கு பலனை கொடுக்கும். கோவில் குளங்களுக்கு செல்வதாக இருந்தால் கையில் அழகாக மருதாணி இட்டுக் கொள்ளுங்கள். பெண்களுக்கு ஐஸ்வர்யத்தையும் சந்தோஷத்தையும் சேர்ந்து தரக்கூடிய சக்தி இந்த மருதாணிக்கு மட்டும்தான் உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -