மறுபிறவி எடுக்காமல் இருக்க வழிபாடு

suyabagavan
- Advertisement -

அடுத்த பிறவி உங்களுக்கு வேண்டுமா? என்று ஒரு மனிதனை பார்த்து கேட்டால் என்ன பதில் வரும். அய்யய்யோ, அடுத்த பிறவியா வேண்டவே வேண்டாம் சாமி என்று தான் சொல்வார்கள். ஒருத்தர் வாயில் இருந்து கூட, அடுத்த ஜென்மத்தில் இந்த பூலோகத்தில் நான் மனிதனாக பிறவி எடுக்க வேண்டும், அடுத்த ஜென்மம் எனக்கு வேண்டும் என்று சொல்லவே மாட்டாங்க. அந்த அளவுக்கு இந்த கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு துன்பம் இருக்கிறது.

மறுபிறவியே வேண்டாம், செய்த பாவங்களுக்கு உண்டான அத்தனை தண்டனைகளும் இந்த பிறவியிலேயே கழிந்து விடட்டும். நல்லதோ கெட்டதோ இந்த பிறவியிலேயே முடிந்து போகட்டும். அடுத்த ஜென்மம், அதாவது மறுபிறவி இல்லாமல் இருக்கவும், செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகள் குறையவும், இறைவனின் பாதத்தில் முக்தி கிடைக்கவும், ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முத்தி கிடைக்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு. அசைவ சாப்பாடு சாப்பிட்டு, இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாது. மறுபிறவி தேவை இல்லை, எந்த பிறவியில் இருக்கும் இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்து முக்தி கிடைக்க வேண்டும் என்றால், பதிவை தொடர்ந்து படியுங்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்.

சூரிய பகவானுக்கு வாகனமாக இருக்கக்கூடிய குதிரையின் படம் உங்க வீட்டில் இருக்கணும். சூரிய பகவானோடு குதிரை படம் இருந்தாலும் சரி, அல்லது வெறும் குதிரையின் படம் இருந்தாலும் சரி, அந்த குதிரையை தான் நீங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் வழிபாடு செய்யணும். என்ன சுண்டல் செய்து வைக்கணும் தெரியுமா. கொள்ளு சுண்டல். கொள்ளை ஊறவைத்து வேகவைத்து தாளித்து துண்டல் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சுண்டலை, அந்த குதிரைக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும். கற்பூரம் காட்டணும், ஊதுவத்தி காட்டணும், என்ற அவசியமெல்லாம் கிடையாது. செய்த சுண்டலை எச்சில் படாமல் ஒரு பாத்திரத்தில் போட்டு குதிரைக்கு முன்பாக வைத்து, அந்த குதிரை படத்திற்கு முன்பாக அமர்ந்து இரண்டு நிமிடம் வேண்டுதல் வைக்கவும்.

இனி பாவம் செய்யமாட்டேன். அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கொடு இறைவா என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த சுண்டலை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடுங்கள். தெரிந்தே நிறைய பாவத்தை செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து விட்டால், முக்தி கிடைக்கும் என்று யோசிக்க கூடாது. அறிந்தே நாம் சில பாவங்கள் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க வழிபாடு

நம்முடைய மனசுக்கு தெரியும் இது பாவம் என்று. ஆனால் புத்தி கெட்ட மூளை அதை போய் செய்து வைக்கும். கூடுமானவரை சில விஷயங்களில் மூளை சொல்வதை கேட்காமல், மனசு சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய பாவங்கள் குறையும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -