மாசி 1ஆம் தேதி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்

sivan3
- Advertisement -

நாளை மாசி மாதம் பிறக்கவிருக்கின்றது. சூரிய பகவான் கும்ப ராசிக்கு பிரவேசிக்கவிருக்கின்றார். இந்த கிரக மாற்றத்தின் அடிப்படையில், 12 ராசிக்காரர்களுக்கும் செய்ய வேண்டிய ஜோதிடம் சார்ந்த பரிகார பலன்களை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். பொதுப்படையாக 12 ராசிக்காரர்களும் இந்த மாதம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

நாளைய தினம் பிப்ரவரி மாதம் 13ம் தேதி, மாசி 1ஆம் நாள் இந்த பரிகாரத்தை செய்தால், மாசி மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால் கூட, அந்த தோஷங்கள் விலகி, கெட்டதும் நல்லதாக மாறிவிடும். உங்கள் ராசிக்கு நாளைய தினம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய், உங்கள் கையால் அருகம்புல் மாலையை கட்டிப்போட்டு, பிள்ளையாரை 12 முறை வலம் வர வேண்டும். இதனால் உங்களுடைய வேலையில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். ஆரோக்கியம் மேம்படும். கிரக தோஷங்கள் விலகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் நாளை அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. இதை செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம் குறையும். வேலையில் இருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் தானாக விலகும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரியன் உதயமாகும் சமயத்தில் உங்கள் கையில் ஒரு செப்பு பாத்திரத்தில், தண்ணீரை வைத்து, அந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கொஞ்சமாக கீழே ஊற்றி சூரியனுக்கு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். உங்களுடைய பிரச்சனை சரியாகும். நாளை உங்கள் கையால் பிராமனர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு பொருளை தானம் செய்யவும். அரிசி பருப்பு, தானிய வகைகள் எதை செய்தாலும் சரிதான்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அம்மனுக்கு உங்கள் கையால் செவ்வரளி பூக்களை மாலை கட்டி போடலாம். ரொம்பவும் வாழ்க்கையில் பிரச்சனை, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்ச பழம் மாலை கட்டி போடலாம்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்க அடுத்த மாதம் முழுவதும் சந்தோஷமாக இருக்க, இன்று நீங்கள் சப்த கன்னியர்களை வழிபாடு செய்ய வேண்டும். சப்த கன்னியர்களுக்கும் வாசம் நிறைந்த பூக்களை வைத்து, எல்லோருக்கும் ஒவ்வொரு பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போங்க. கோசாலை இருந்தால் அந்த பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த உணவை வாங்கிக் கொடுங்கள். சிவன் கோவிலில் விளக்கு போட்டு பத்து நிமிடங்கள் அமர்ந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நாளை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். உங்கள் கைகள் துளசி மாலையை வாங்கிக் கொண்டு போய் பெருமாளுக்கு போடுங்க. கொஞ்சம் மல்லி புஷ்பங்களை வாங்கி சென்று மகாலட்சுமிக்கு சாத்துங்கள். இரண்டு நெய் விளக்கு ஏற்றுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் நாளை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். உங்க வீட்டு பக்கத்தில் அங்காள பரமேஸ்வரி, பாராசக்தி, பத்திரகாளி, வாராகி இப்படி ஏதாவது உக்கிர  அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி அந்த அம்மன் கோவிலில் இருந்து கொஞ்சம் குங்குமத்தை வாங்கி நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை எடுத்து வந்து தினமும் இந்த மாதம் முழுவதும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நாளை முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். முருகருக்கு உங்கள் கைகளால் முல்லைப் பூ அல்லது செவ்வரளி பூ, வாங்கிட்டு போங்க. இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் விநாயகரது வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக அரச மரத்துக்கு அடியில் நாகர் சிலை உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அந்த நாகர் சிலைக்கு தண்ணீரை ஊற்றி அரசமரத்தை 11 முறை வலம் வந்தால் உங்களுக்கு இந்த மாதம் தோஷங்கள் விலகும் நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் நாளைக்கு கட்டாயமாக அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். அனுமனுக்கு உங்கள் கையால் வெண்ணெய் வாங்கி கொடுங்க. முடிந்தால் வடை மாலை செய்து போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு.

மீனம்

மீன ராசிக்காரர்கள் நாளை பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை கொடுக்கும். சயன கோளத்தில் பெருமாள் பழுத்திருப்பார் அல்லவா அந்த கோவிலுக்கு போங்க. நாளைய தினம் பெருமாள் ஆலயத்தில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -