பணம் தரும் ஏஞ்சல் நம்பர்

cash6
- Advertisement -

எப்போதுமே பணத்தை நாம் தேடி செல்லக்கூடாது. பணத்தை நம்மை நோக்கி வர வைக்க வேண்டும். இது ஆணவத்தோடு சொல்லக்கூடிய வார்த்தை கிடையாது. நாம் எதன் மீது ரொம்ப பாசமா அன்பாக இருக்கின்றோமோ, அந்த ஒரு பொருள் தானாக நம்மை தேடி வந்துவிடும். வெறித்தனத்தோடு ஒரு விஷயத்தை அடைந்தே தீர வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த பொருள் நமக்கு கிடைக்காது.

அவனிடம் மட்டும் நிறைய பணம் இருக்கிறது. என்னிடம் பணம் இல்லையே என்ற பொறாமை குணத்தோடு நினைத்தாலும் நம்மிடம் பணம் தங்காது. உங்களுடைய தேவைகள் பூர்த்தியாக உங்களுக்கு தேவையான பணத்தை விரும்பி அழைத்தால், நிச்சயம் பணம் உங்களை தேடி வர தொடங்கிவிடும். அதற்கான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பணம் தரும் ஏஞ்சல் நம்பர்

இது பணத்தை பிரபஞ்சத்திடம் இருந்து ஈர்க்கக்கூடிய ஒரு எண். இந்த எண்னை பச்சை நிற பேனாவில் எழுதினால் போதும். உங்களுக்கான பணம் தானாக வந்துவிடும். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிற பேனாவில் ஒரு வட்டம் போட்டுக்கோங்க. அதுதான் உலகம் அப்படின்னு நீங்க நினைச்சுக்கோங்க. மானசிகமா நினைச்சுகோங்க.

அந்த வட்டத்திற்குள் 798 என்ற எண்ணை எழுத வேண்டும். 7 என்பது கேது, 9 செவ்வாய், 8 சனிபகவானை குறிக்கக் கூடியது. அந்த நம்பருக்கு கீழே உங்களுடைய தேவையை பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவை அந்த பணத்தை எழுதிவிட்டு அந்த பணம் எனக்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இல்லையென்றால் அந்த நம்பரை எழுதிவிட்டு இந்த பிரபஞ்சம் எனக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும். பணம் என்னை நோக்கி வரவேண்டும் என்ற வார்த்தைகளை கூட எழுதலாம். அது உங்களுடைய விருப்பம் தான். நல்ல பெரிய வட்டமாக போட்டுக் கொள்ளுங்கள். அதன் உள்ளே ஒவ்வொரு வரியிலும் இந்த நம்பரும் இருக்க வேண்டும்.

பண தேவை என்ற வார்த்தையும் இருக்க வேண்டும். இப்படி எத்தனை முறை வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த நம்பரையும் உங்களுடைய வேண்டுதலையும் அந்த பேப்பரில் எழுதலாம். எவ்வளவு நம்பிக்கையோடு இதை எழுதுகிறீர்களோ, அவ்வளவு நம்பிக்கையோடு, அவ்வளவு சீக்கிரமாக பணம் உங்களை நோக்கி வர தொடங்கி விடும். ஒரு வெள்ளை நிற காகிதம்.

- Advertisement -

நிறைய நம்பிக்கை. ஒரே ஒரு பச்சை நிற பேனா. இந்த மூன்று இருந்தால் போதும். பணத்தை சுலபமாக ஈர்க்கலாம். இதை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுதுவது சிறப்பு முடியாதவர்கள் நேரம் கிடைக்கும் போது அமைதியான இடத்தில் உட்கார்ந்து எழுதுக. இப்படி நிறைய முறை எழுதினால், இந்த பேப்பரை என்ன செய்வது.

பத்திரமாக ஒரு நோட்டு புத்தகத்துக்கு உள்ளே அடுக்கி வையுங்கள். உங்களுக்கு பணம் கிடைத்ததும், கொஞ்சம் நிறைய பேப்பர் சேர்ந்ததும் அந்த காகிதங்களை எல்லாம் அப்படியே கசக்கி ஒரு கவரில் போட்டு ஊருக்கு ஒதுக்கு புறம் கால் படாத இடத்தில் போட்டு விடலாம். தவறு ஒன்றும் கிடையாது. ஆனால் உங்களுடைய தேவை பூர்த்தியாகும் வரை இதை நீங்கள் தினமும் இதை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

கணக்கு எல்லாம் கிடையாது 11 முறை, 27 முறை எத்தனை முறை வேண்டும் என்றாலும் நீங்கள் எழுதலாம். ஒரு நாளைக்கு ஒரு பேப்பரில் எழுதினால் போதும் அதன் உள்ளே எழுதக்கூடிய கணக்கு உங்கள் விருப்பம். சில பேருக்கு இந்த பரிகாரம் மூன்று நாளில் பலன் தரலாம். சில பேருக்கு இந்த பரிகாரத்தை எழுதிய மூன்றே மணி நேரத்தில் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: அரசு வேலை கிடைக்க எளிமையான வழிபாட்டு முறை

அது நீங்கள் பரிகாரத்தை எந்த அளவுக்கு நம்பிக்கையோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை முயற்சி செய்து பாருங்கள் நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றங்களை பெறுவீர்கள் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -