கேட்டது கிடைக்க அஸ்திர வழிபாடு

vendhuthal niravera asthira poojai
- Advertisement -

முருகா என்ற பெயரை கேட்டாலே உருகி விடும் அளவிற்கு கந்தனுக்கு பக்தர்கள் உண்டு. அந்த அளவிற்கு பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றக் கூடிய அதிசக்தி வாய்ந்த கருணைமிக்க கடவுள் தான். இந்த கந்தன் அப்பேற்பட்ட முருகனும் உடனடியாக உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற சில வழிபாட்டு முறைகள் உள்ளது.

எந்த கடவுளையும் மனதார நினைத்து வழிபட்டாலே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான முறையில் அவர்களுக்கு பிடித்த பொருளை வைத்து வணங்கும் பொழுது அதன் பலன் சற்று கூடுதலாக இருக்கும். அது போல தான் முருகப் பெருமானிடம் இந்த முறையில் வேண்டுதல் வைத்தால் நிச்சயம் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அஸ்திர வழிபாடு

முருகன் என்றாலே வேல் இல்லாமல் இல்லை. வேலை வணங்கினாலே வேலவனை வணங்கியது போல தான். வேல் உண்டு வினை இல்லை. இப்படி வேலை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய வேல் கொண்டு முருகப்பெருமானை எப்படி வணங்குவது என்று தான் இப்போது நாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக எந்த தெய்வத்திடம் நாம் வேண்டுதல் வைத்தாலும் அதற்கு ஈடாக இதை நான் காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொள்வது நம்முடைய வழக்கம். அப்படி செலுத்தினால் தான் கடவுள் செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. இது நம்முடைய மனத திருப்திக்காக மட்டுமே அப்படி முருகப்பெருமானை வேண்டும் போது வேல் சாற்றுவதாக வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டு அப்படியே வேலை கொண்டு சாற்ற கூடாது. அந்த வேலை வாங்கி வந்து வீட்டில் முறைப்படி வைத்து வணங்க வேண்டும். அதற்கு வேலை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் சிகப்பு நிற துணி விரித்து வேலை அதில் நிறுத்தி வைக்க வேண்டும். வேலுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து அதற்கு பூ சூட்டுங்கள். வேலின் முனையில் ஒரு எலுமிச்சை பழத்தை சுருக்கி வைக்க வேண்டும்.

இந்த வேலுக்கு தினமும் தீபம் ஏற்றி எளிமையான நெய்வேத்தியம் வைத்து வேல் முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் வேலை வீட்டில் வைத்து வழிபாடு செய்த பிறகு தான் ஆலயத்தில் கொண்டு காணிக்கையாக செலுத்த வேண்டும். இது போல வேல் வைத்து வணங்குவதை அஸ்திர பூஜை என்று சொல்வார்கள்.

- Advertisement -

இந்த 48 நாட்கள் வீட்டில் வைத்து வணங்கும் போது அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து வணங்க வேண்டும். இது போல வேண்டிக் கொண்டு முருகனுக்கு வேலை சாற்றும் போது உங்களுடைய எந்த வேண்டுதலாக இருந்தாலும் அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர பைரவர் வழிபாடு

தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட எளிதில் தீர்த்துக் கொள்ள இந்த அஸ்திர வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -