பர்சில் பணம் சேர ஜவ்வாது பரிகாரம்

purse pachai karpooram
- Advertisement -

பர்சில் பணம் வைக்க இடம் இல்லாத அளவிற்கு உங்க மணி பர்ஸ் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த இரண்டு பொருட்களை எப்பொழுதும் பர்சில் இருக்கும் படி பார்த்துக் கொண்டாலே போதும்.

பணம் எல்லோருடைய வாழ்க்கையிலும் அதை முக்கிய தேவையாக உள்ளது. ஒரு மனிதனின் தேவையே இந்தக் காலத்தில் பணத்தைக் கொண்டு தான் தீர்மானிக்கிறார்கள். அந்த அளவிற்கு பணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அப்படியான பணம் நம்மிடம் அதிகம் சேரவும், பணம் தங்கி பெருகவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகள் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணம் தங்க பரிகாரம்

பணத்தை எப்போதும் நம்மிடம் தங்க வைத்துக் கொள்ளவும் பெருக செய்ய வேண்டுமெனில் பணத்தை ஈர்க்கும் தன்மை நம்மிடம் இருக்க வேண்டும். தெய்வ அனுகிரகத்தோடு சேர்த்து இந்த ஈர்ப்பு தன்மை தான் நம்மை செல்வ செழிப்புடன் வாழ வைக்கும். ஆனால் தெய்வத்தையே தீர்க்கக் கூடிய தன்மை சில வாசனை திரவியங்களுக்கு உண்டு அதில் ஒன்று தான் ஜவ்வாது.

ஜவ்வாதின் மணத்திற்கு நேர்மறை எண்ணங்கள் பெருகுவதோடு, ஜவ்வாது எந்த இடத்தில் நாம் வைக்கின்றோமோ அதற்கான ஆற்றல் பெருகும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் வீட்டில் பணம் வைக்கும் இடமாகட்டும் நகை வைக்கும் இடமாகட்டும் பூஜை அறை என அனைத்து இடத்திலும் ஜவ்வாதின் பயன்பாட்டை அதிக அளவில் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஆலயங்களிலும் கூட இன்றளவும் ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஜவ்வாதின் பயன்பாடு கட்டாயமாக இருக்கும். அதே போல் வீட்டில் கலசம் நிறுத்தி வணங்குபவர்களும் அதில் கட்டாயமாக சிறிதளவு ஜவ்வாது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தெய்வத்தை அங்கு ஆவாகனம் செய்ய உகந்த பொருளாக கருதப்படுகிறது. இந்த ஜவ்வாதை தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது நாம் நினைத்து செல்லும் காரியம் அனைத்தும் தடை இன்றி நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி தினமும் குளிக்கும் தண்ணீரில் கூட சிறிதளவு கல் உப்பு, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது கலந்து குளிக்கும் போது நம்முடைய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதுடன் தேக தோஷம் நிவர்த்தி ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் நல்ல ஆற்றலும் தெய்வீக தன்மையும் ஏற்படும். வீட்டில் விளக்கு ஏற்றும் போது அந்த எண்ணெயிலும் சிறிதளவு ஜவ்வாது சேர்க்கும் போது வீடு தெய்வம்சம் நிறைந்ததாக இருக்கும்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட எல்லோருடைய தேவையை நிறைவேற்றக் கூடிய பணத்தை எஜவ்வாது கொண்டு எப்படி ஈர்ப்பது என்று பார்க்கலாம். பணம் வைக்க தனியாக நாம் பீரோ போன்றவழற்றை வைத்திருந்தாலும் பணம் வந்தவுடன் முதலில் வைக்க வேண்டும் நம்முடைய மணி பர்ஸ் தான். ஆகையால் அதை முதலில் பணம் ஈர்ப்பு தன்மையானதாக மாற்ற வேண்டும்.

அதற்கு மணி பர்சில் ஒரு சிறிய பச்சை நிற துணியில் பச்சை கற்பூரத்தையும் செவ்வாதையும் ஒன்றாக கலந்து மூட்டை போல கட்டி வைத்து விடுங்கள். இதனுடைய நறுமணத் தன்மைக்கு நிச்சயம் பணம் ஈர்ப்பு தன்மையை அதிகரிக்கும். பணம் இல்லாத ஒரு நிலையை எப்போதும் ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது. இதனுடைய நேர்மறை அதிகரிக்கும் தன்மையால் நம்முடைய எண்ணங்களும் நேர்மறையாக மாறும்.

இதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும். அது மட்டும் இன்றி நாமும் அதற்கான முயற்சிகள் எடுக்க நம்முடைய உடலும் மனமும் நல்ல ஆற்றலுடன் செயல் புரியும். மனிதனுடைய கெட்ட ஆற்றல்கள் விலகி நல்ல சிந்தனைகளுடன் உழைக்க முற்பட்டாலே பணப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டி விடலாம். அத்தகைய தன்மையை இது போன்ற வாசனை திரவியங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக சொர்ண ஆகர்சன பைரவர் வழிபாடு

ஜவ்வாதை கொண்டு செய்யப்படும் இந்த எளிய பரிகார முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள். எப்போதும் நம்முடைய உழைப்பு முயற்சியுடன் சேர்த்து செய்யப்படும் இது போன்ற பரிகாரங்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -