திறமையை வெளிக் கொண்டு வரும் திலகம்

thilagam
- Advertisement -

எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு திறமை, புத்திசாலித்தனம் இருக்கத்தான் செய்கிறது. சில பேருக்கு அந்த புத்திசாலித்தனமும் திறமையும் சீக்கிரம் வெளிப்படும். சில பேருக்கு அது வெளி வருவதற்கான நேரம் கொஞ்சம் அதிகமாக எடுக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை புத்திசாலித்தனத்தை சீக்கிரம் வெளியில் கொண்டுவர வேண்டுமா?

உங்கள் மந்தத்தனத்தை போக்க வேண்டுமா? வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே சந்திப்பவர்களுக்கு ஜெயிப்பதற்கு உண்டான வழிகள் கிடைக்க வேண்டுமா? இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக.

- Advertisement -

திறமையை வெளிக் கொண்டு வர திலகம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் குப்பைமேனி இலையின் பொடி, கசகசா பொடி, அரகஜா. குப்பைமேனி இலையை எடுத்து நன்றாக காய வைத்து மிக்ஸி போட்டு பொடி செய்து கொண்டாலும் சரி, அல்லது நாட்டு மருந்து கடைகளில் குப்பைமேனி பொடி கிடைக்கின்றது அதை வாங்கியும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொஞ்சம் கசகசாவே மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். புதன்கிழமையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். புதன் பகவானையும் உள்ளம் உறுகி வேண்டுதல் வையுங்கள். புதன் புத்திகாரகன் அதற்காகத்தான் இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் 2 ஸ்பூன் குப்பைமேனி பொடி, 1 ஸ்பூன் கசகசா பொடி, சிறிதளவு புனுகு சேர்த்து எல்லாவற்றையும் கலந்தால் ஒரு மைபோல உங்களுக்கு கிடைக்கும். இதை பூஜை அறையிலேயே வைத்து விட வேண்டும். தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, இந்த திலகத்தை எடுத்து இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டால், உங்களுடைய திறமை வெளிப்படும். எப்போதுமே மந்தமாக இருக்கும் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கி விடுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் குவியும்.

எப்போதும் மந்தமாகவே இருந்த உங்களுடைய மூளையும் உடம்பும் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கிவிடும். உங்களைச் சுற்றி போடப்பட்டிருந்த சோம்பேறித்தனத்திற்கே உண்டான கட்டு உடைக்கப்படும். இந்த புதன்கிழமை தொடங்கிய பரிகாரத்தை தொடர்ந்து 3 வாரம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல வித்தியாசங்கள் தெரியும்.

- Advertisement -

ஏதோ ஒரு வேலைக்கு போயிட்டு இருக்கீங்க. அந்த வேலையை உங்களால் திறமையாக செய்ய முடியாமல் தவித்து வருகிறீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உங்களை விட திறமையாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்குகிறார்கள். நீங்கள் மட்டும் அந்த இடத்தில் பின் தங்கி இருந்தால் உங்கள் மனது எவ்வளவு கஷ்டப்படும். நாலு பேர் மத்தியில் நாம முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்து, இந்த திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள். மூன்று வாரத்தில் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தெரியும்.

புதுசாக ஏதோ ஒரு தொழில் தொடங்கி நடத்தி வருகிறீர்கள். ஆனால் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்த, தொழிலை முன்னுக்கு கொண்டுவர, தொழிலில் அதிக லாபம் ஈட்ட உங்களுக்கு தெரியவில்லை. தொழில் நஷ்டத்திலேயே போகிறது. உங்களுக்கு உதவி செய்யவும் யாரும் முன் வரமாட்டேங்குறாங்க. உங்களைப் பின்னுக்கு தள்ள தான் பார்க்கிறார்கள் எனும் போது இந்த திலகத்தை தினமும் நெற்றி இட்டுக் கொண்டு அந்த வியாபாரத்தை நடத்த செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர நரசிம்மர் வழிபாடு

தானாக உங்களுக்கு எல்லா நல்லதும் நடக்கும். உங்களுடைய தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான புத்தம் புது ஐடியாக்கள் உங்களுக்கே வரும். உங்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரும் வேலையை இந்த திலகம் பார்த்துக் கொள்ளும் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -