உங்கள் கூந்தல் பட்டு நூலை போல பளபளப்பாக மாற வேண்டுமா? ஜப்பானிய பெண்கள் பயன்படுத்தும் இந்த சீக்ரெட்டை டிரை பண்ணி பாருங்கள்.

- Advertisement -

தலைமுடி நல்ல வழுவழுப்பாக பள பளப்பாக நீளமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்ன. ஆனால் நம் நாட்டில் உள்ள சூழலுக்கு அதை போல முடியை பெறுவதெல்லாம் இயற்கையில் நடப்பது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம். ஆனால் ஜப்பானிய பெண்களுக்கு முடிகளை பார்த்தால் தெரியும் பட்டு நூலை போலவே பளப்பளவென்று ஷைனாக பார்ப்பதற்கே அவ்வளவு அழாகாக இருக்கும். அங்குள்ள அந்த சூழல் தான் இதற்கு காரணம்.

இதோடு அவர்கள் பயன்படுத்தும் இந்த ஆயில். அதே போன்ற முடியை நாம் பெற, அந்த சீக்ரெட் ஆயிலை தயார் செய்து தேய்த்து வந்தால், உங்கள் முடியும் அப்படி சைனாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

இதற்கு முதலில் நான்கு பல் அளவு பூண்டு எடுத்து தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு துண்டு இஞ்சி தோல் நீக்கி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் காய் சீவும் சீவலில் நன்றாக சீவி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சின்ன பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயும் சேர்த்து அத்துடன் இந்த துருவிய விழுதையும் சேர்த்து அடுப்பில் லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த எண்ணெய் சூடு ஆறியவுடன் ஒரு வடிகட்டி வைத்து வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இப்போது நாம் சேர்க்கும் இந்த ஒரு எண்ணெய் தான் மிகவும் முக்கியமானது. அது அவகோடா ஆயில் இது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் இந்த எண்ணையை இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஐந்து கிராம்புகளையும் போட்டு அந்த எண்ணெய் ஒரு 12 மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் தலைக்கு குளிக்கும் முன்பாகவே இந்த எண்ணெய் எடுத்து உங்கள் வேர்க்கால்களில் நன்றாக தடவி ஒரு பத்து நிமிடம் அப்படியே மசாஜ் செய்து விட்டு விடுங்கள். தேய்த்துப் பிறகு ஒரு துணி வைத்து உங்கள் தலைமுடியை கட்டி வைத்துவிடுங்கள். குறைந்தது இரண்டு மணி நேரமாவது உங்கள் தலையில் இருக்க வேண்டும் எந்த எண்ணெய் இருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் பயன்படுத்தும் சீயக்காய் அல்லது ஷாம்பு எதுவாக இருந்தாலும் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி குதிகால் வெடிப்பை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு நிமிடத்தில் குதிக்கால் வெடிப்பை சரி செய்ய இந்த ஒரு குறிப்பு..

இந்த எண்ணெய்யில் பொருட்களை சேர்த்த பிறகு 12 நேரம் கட்டாயமாக ஊற வேண்டும். அப்போது தான் நல்ல பலன் தரும். இந்த முறையை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் முடி பளபளவென்று பார்ப்பவர் கண்களை பறிக்கும்படி இருக்கும்.

- Advertisement -