வேர் வேராக கொட்டும் முடியை சரி செய்ய இந்த ஒரு எண்ணெய் போதும். அழகிய கரு கரு முடிக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முடி தரையைத் தொடும் அளவிற்கு வளரும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

நீண்ட கருகரு கூந்தல் பெற நாம் என்ன தான் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வந்தாலும், அதற்கு முழு தீர்வு என்பது இயற்கையான முறையில் தான் கிடைக்கும் இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இன்றைய சூழ்நிலை இது போல இயற்கையான முறைகளை பின்பற்றும் படியாக இல்லை என்பது தான் உண்மை. இந்த குறிப்பில் உள்ள எண்ணையை தயார் செய்ய உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது. அதிக செலவும் ஆகாது. வாங்க இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணெய் தயாரிப்பதற்கு மற்ற எண்ணெய்களை செய்வது போல காய்ச்சி ஆற வைக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. நான்கே பொருள் தான் அதை வாங்கி எண்ணெயில் போட்டு விட்டால் போதும். மிக மிக எளிமையான முறையில் நல்ல முடி வளர்ச்சிக்கான ஒரு இயற்கையான எண்ணெய் நாம் வீட்டில் தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள் வெட்டிவேர், காய்ந்த நெல்லிக்காய், காய்ந்த செம்பருத்தி பூ, வேம்பாலபட்டை இந்த நான்குமே 50 கிராம் அளவிற்கு சமமாக வாங்கிக் கொள்ளுங்கள். இது அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

அடுத்ததாக நல்ல செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். இது போல எண்ணெய் தயாரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் நல்ல தரமான சுத்தமான எண்ணெயாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தயாரிக்கும் எந்த எண்ணையும் உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

- Advertisement -

ஒரு நல்ல அகலமான கிண்ணத்தில் ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கி வந்த இந்த நான்கு பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சேர்த்த பிறகு நன்றாக கலந்து ஒரு நாள் அப்படியே வைத்து விடுங்கள். இந்த கிண்ணத்தின் மேலே மெல்லிய துணியை கட்டி நல்ல வெயிலில் படும்படி வைத்து எடுத்தால் மிகவும் நல்லது. சூரிய ஒளி இதில் படும் போது இந்த எண்ணெய் இன்னும் அதிக பலன் கொடுக்கும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் பரவாயில்லை வீட்டில் கூட வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் முழுவதும் இப்படி வைக்கும் போது அந்த பொருட்களில் இருக்கும் சாறு அனைத்தும் எண்ணெயில் சேர்ந்து இருக்கும். அடுத்த நாள் இதை வடி கட்டி ஒரு பாட்டிலில் உருட்டி வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முடி வளர்ச்சிக்கு தேவையான எண்ணெய் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: முன்நெற்றியில் வகிடு தெரியும் அளவிற்கு முடி கொட்டி விட்டதா? எந்த பக்கம் வகிடு எடுப்பது என தெரியாமல் திணறும் அளவிற்கு அடர்த்தியாக முடி வளர எதையும் தேடாதீங்க, இதை மட்டும் செய்யுங்க!

தினமும் இந்த எண்ணையை வைத்து உங்கள் முடியில் தேய்த்து வாருங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு முடி வளர்ச்சி இருப்பதோடு,முடி உதிர்வும் நின்று கருகருவென்று அழகாக முடியை பெற, நீங்கள் இந்த எண்ணெய் பயன்படுத்திப் பாருங்கள்.

- Advertisement -