இந்த முத்துக்கள் இருந்தால் போதும் , முகத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளிகள் மறைந்து களங்கமில்லா நிலவை போன்ற பிரகாசமான அழகை பெறலாம்.

- Advertisement -

இது இன்றைய கால பெண்களின் பெரிய பிரச்சனை இந்த முகப்பரு. முகப்பரு வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. ஹார்மோன் பிரச்சனைகள், உணவு பழக்க வழக்கங்கள், அதிகப்படியாக எண்ணெய் வடியும் சருமம், முகத்தில் அதிகமான அழுக்கு சேர்வது என முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் உண்டு. இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் முகப்பருவை சரி செய்வதற்கான குறிப்பு பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சில பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் ஒன்று, இரண்டு பருக்கள் தோன்றும் பின்பு அது மறைந்து விடும். இது சாதாரணமாக வந்து மறைவது தான். இது குறித்து நாம் பெரிதும் கவலைப்பட தேவையில்லை. ஆனால் சாதாரணமாக முகத்தில் தோன்றும் பருக்களை இந்த முறையில் சுலபமாக சரி செய்து விடலாம்.

- Advertisement -

முகப்பரு வந்தால் முதலில் நாம் செய்ய வேண்டியது வந்த முகப்பருக்களை கிள்ளவே கூடாது. சிலர் முகப்பருக்களை கிள்ளி விடுவார்கள். இதன் மூலம் முகப்பரு குறையாது அதிகமாக ஆவதுடன் அந்த இடங்களில் எல்லாம் கரும்புள்ளிகள் தோன்றி அசிங்கமாக மாறி விடும். முகப்பரு வந்தால் கண்டிப்பாக செய்யக் கூடாத விஷயங்களில் ஒன்று முகப்பருக்களை கிள்ளுவது.

இந்த ஸ்பேஸ் பேக் செய்ய நமக்கு தேவை மாதுளை பழ முத்துக்கள். மாதுளை பழத்தை வைத்து முகப்பருவை போக்க முடியுமா? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகின்றது. கண்டிப்பாக இதில் சில பொருட்களை சேர்த்து முகத்தில் போடுவதால் முகப்பரு நீங்கி விடும்.

- Advertisement -

அதற்கு முதலில் மாதுளை பழ முத்துக்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்து நல்ல பைன் பேஸ்ட்காக அரைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கிரீன் டீ, எப்போதும் போல கிரீன் டீ போட்டு அந்த சாறு இறங்கிய தண்ணீரை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல குழைத்து உங்கள் முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

பத்து நிமிடம் கழித்து முகத்தை கிளாக் வயசில் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு முகத்தை சுத்தம் செய்வது கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் வேற லெவல் ரிசல்ட் கிடைக்கும். குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருள் இருந்தால், கொட்டிப்போன இடத்தில் எல்லாம் முடி முட்டி மோதிக் கொண்டு வளரும்.

இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலே போதும் ஒரு மாதத்திற்குள் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு நீங்கி, முகப்பரு தடம், முகத்தில் முகப்பரு வந்து அந்த இடத்தில் பள்ளம் பள்ளமாக கூட சிலருக்கு ஆகியிருக்கும் இதை எல்லாம் சரி செய்து விடலாம். அதன் பிறகு மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் இதை செய்தால் போதும் உங்கள் சருமம் எப்போதும் பளப்பளப்பாக இருக்கும். முகப்பரு புள்ளிகள் ஏதுமின்றி முகப் பொலிவு பெறலாம்.

- Advertisement -