துஷ்ட சக்தியும், கண் திருஷ்டியும் நம்மை விட்டு விலக, கெட்ட சக்திகள் நம் உடம்பில் ஊடுருவாமல் இருக்க, தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்.

muneeswaran
- Advertisement -

எந்த ஒரு கெட்ட சக்தியும், கண் திருஷ்டியும் நம்மை நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் ஒரு காவல் தெய்வத்தின் வழிபாடை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், எதுவாக இருந்தாலும் காவல் தெய்வ வழிபாடு நமக்கு ஒரு பாதுகாப்பை கொடுக்கும். அந்த வரிசையில் சிவபெருமானின் அம்சத்தைக் கொண்ட முனீஸ்வர காவல் தெய்வத்தின் மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாம் எல்லோருக்கும் தெரியும். முனிஸ்வரர் ஒரு காவல் தெய்வம் என்பது. முனீஸ்வரரை சில பேர் குலதெய்வமாகவும் வழிபாடு செய்வார்கள். அந்த முனீஸ்வரரை தினமும் நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் நம்முடைய உடம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் தாங்காது. எந்த ஒரு கண் திருஷ்டியும் பாதிப்பை உண்டாக்கி விடாது.

கெட்ட சக்தி விலக சொல்ல வேண்டிய முனீஸ்வரர் மந்திரம்:
யாரெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லலாம். எப்போதெல்லாம் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். எப்போது இந்த மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த ஒரு பதிவு இது. சில பேருக்கு உடம்பில் என்ன பிரச்சனை என்றே தெரியாது. டாக்டரிடம் சென்றால் எல்லா ரிசல்ட்டும் பாசிட்டிவ். ஆனால் உடம்பு அடித்துப் போட்டது போல வலிக்கும்.

- Advertisement -

தூங்கும் போது யாரோ நம்மை தொந்தரவு செய்வது போல இருக்கும். வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க. ஆனால் இருப்பது போல ஒரு உணர்வு. இப்படி ஒரு பயந்த உணர்வு அடிமனதில் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் 48 நாட்களில் உங்களுடைய நிலைமை நல்லபடியாக மாறிவிடும்.

சில பேருக்கு தன் நிலை தடுமாற்றமாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாது. சோகமாகவே இருப்பார்கள். அதுதான் பேய் அடைந்தது போல இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா.  புதியதாக முயற்சி எடுக்கும்போது தடைகள் வந்து விடும். இதனாலேயே அவர்கள் ரொம்பவும் பயந்த சுபாபுத்துடன் மாறிவிடுவார்கள். மன தைரியம் இல்லாமல் கோழையாக இருப்பவர்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம். ஆண் பெண் இருபாலரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

- Advertisement -

பயணத்தின் போது இந்த மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மற்றபடி கண் திருஷ்டி நாள் உண்டாக்கப்படும் கஷ்டங்கள் தீர, காவலுக்கு துணையாக நிற்கும் முனீஸ்வரரை வழிபட இந்த மந்திரம் நமக்கு உதவியாக இருக்கும். முனீஸ்வரரின் மூலமந்திரம் இது. காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு உங்கள் சௌகரியம் போல ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். முனீஸ்வரரின் மூல மந்திரம் இதோ உங்களுக்காக.

ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
சத்ரு சம்ஹாரனாய ஜடா
முனீஸ்வராய நமஹ!

- Advertisement -

48 நாட்களும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்து விட்டு தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். பெண்கள் தீட்டு சமயத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி தடைகள் எதுவும் வராமல் இருக்கும் பட்சத்தில் 48 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் உங்கள் உடம்பை பிடித்த துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகும்.

இதையும் படிக்கலாமே: இந்த இடத்தில் பணம் வைத்தால், எந்த காலத்திலும் உங்களிடம் பணம் தங்கவே தங்காது. வீட்டில் பணத்தை வைக்கவே கூடாத இடம் எது?

வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் விலகும். மன தைரியம் பிறக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள். எதைக் கண்டும் அப்படியே பயந்து நொடித்துப் போக மாட்டீர்கள். ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பல பெரிய பெரிய பிரச்சனைகளை எல்லாம் கூட தகர்க்க கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. முனீஸ்வரரை மனதார நினைத்து இந்த மந்திரம் ஜெபிப்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -