முன் கோபம் குறைய முருகன் வழிபாடு

kobam neenga
- Advertisement -

ஆசையே அழிவிற்கு காரணம் என்று புத்தர் கூறியிருக்கிறார். ஆனால் இன்றைய காலத்தில் ஆசைக்கு நிகராக கோபமும் அழிவிற்கு காரணமாக தான் திகழ்கிறது. ஒருவர் தேவையில்லாமல் கோபப்படுகிறார் என்றால் அந்த கோபத்தால் அவருடைய உடல் நலம் மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களின் மனநலமும் சீரழிந்து விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களின் கோபத்தை குறைத்துக் கொள்வோம் எது நியாயம் தர்மம் என்று யோசித்துப் பேசும் வல்லமை பெறவும் முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வீடு நிலம் அமைய வேண்டும் என்றால் அதற்கு செவ்வாய் பகவான் அருள் புரிய வேண்டும். அதே சமயம் உயர் பதவிகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் செவ்வாய் பகவான் சாதகமாக இருக்க வேண்டும். இதோடு மட்டுமா செவ்வாய் பகவான் பாதிக்கப்பட்டால் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் கோபப்படுவார்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

- Advertisement -

எதையும் புரிந்து கொள்ளாமல் கோபத்தால் தன் வார்த்தைகளை அதிகமாக விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களின் உடல் நலமும், மனநலமும் கெடுவதோடு மட்டுமல்லாமல் உடன் இருப்பவர்களின் உறவும் முறிந்து போய்விடும். இப்படி செவ்வாய் பகவான் பாதிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு உதவும் தெய்வம் முருகப்பெருமான்.

முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. அதிலும் குறிப்பாக செவ்வாய் ஹோரையில் வழிபட்டால் மிகவும் நல்லது. அவரை வழிபடுவதற்காக செல்லும் பொழுது செவ்வரளி பூ, சிவப்பு நிற பூ, மல்லிகைப்பூ, பால், சந்தனம் என்று இதில் ஏதாவது ஒன்றை வாங்கி கொண்டு செல்ல வேண்டும். வசதி இருப்பவர்கள் ஆக இருந்தால் இவை அனைத்தையுமே வாங்கிக் கொண்டு போகலாம்.

- Advertisement -

முருகன் கோவிலுக்கு சென்ற பிறகு முருகப்பெருமானை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும்போது “ஓம் சரவணபவாய ஹ்ரீம் குகா நமோன் நமஹ” என்ற மந்திரத்தை கூறிக் கொண்டே முருகப்பெருமானை வலம் வந்த பிறகு அங்கு இருக்கும் அச்சகரியிடம் வாங்கி வந்த பொருட்களை கொடுக்க வேண்டும். பிறகு முருகன் பெருமானிடம் மனதார நம்முடைய கோபத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இப்படி தொடர்ந்து வாராவாரம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபாடு செய்து வந்தோம் என்றால் நம் வாழ்வில் சொந்தமாக வீடு மனை வாங்குவதில் இருக்கும் தடைகள் நீங்கும். அரசாங்க வேலை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் நீங்கும். மேலும் உயர் பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவிலேயே நல்ல செய்தி வரும். இதோடு மட்டுமல்லாமல் முன்கோபம் ஏற்படுபவர்கள் கோபம் ஏற்படும் பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களின் கோபம் குறைய ஆரம்பிக்கும். நிதானமாக யோசித்து எது நல்லது எது கெட்டது என்று ஆலோசித்து முடிவை எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பணம் கொட்ட கொட்டை பாக்கு பரிகாரம்

கோபப்படுவதால் மன நலமும் உடல் நலனும் கெடுவதோடு மட்டுமல்லாமல் உறவுகளும் கெட்டுவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. முருகப்பெருமானிடம் முழு நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை கூறி தங்களின் உடல் மன மற்றும் உறவுகளின் நலத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்

- Advertisement -