தங்கத்தை விட, இந்த 1 இலைக்கு மதிப்பு அதிகம். இந்த ஒரு ரகசியத்தை தெரிந்து கொண்டால், இந்த இலையை எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க. திருடியாவது கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்வீர்கள்.

pachai-karpooram
- Advertisement -

அடித்துப் பிடித்து வாழ்க்கையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக விரைவாக ஓடிக் கொண்டிருப்போம். வாழ்க்கையும் வேகம் வேகமாக ஓடிவிடும். பிரச்சனைகள் எதுவும் பெரியதாக இருக்காது. நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வருமானம் என்று செட்டிலான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு செல்வோம். ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட தொடங்கும். ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை ஸடன் பிரேக் போட்டது போல நிற்கும். எந்த பக்கம் செல்வது என்ற தடுமாற்றம் வந்துவிடும். சம்பாதித்த பணம் சொத்து சுகம் உறவு எல்லாவற்றையும் இழக்க கூடிய சூழ்நிலை கூட ஏற்படும்.

இப்படிப்பட்ட பிரச்சனைகள், எதிர்பாராமல் எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் வரும். அது எதார்த்தமான ஒன்று. வாழ்வு என்று ஒன்று இருந்தால், அதில் வீழ்ச்சி என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். இந்த வீழ்ச்சியை சரி செய்ய அற்புதம் வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

விலைமதிக்க முடியாத தங்கத்தால் கூட நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை போக்க முடியாது. ஆனால் இந்த ஒரு இலை போக்கிவிடும். அது எந்த இலை. அந்த இலையை பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்துவது, ஆன்மீகம் சார்ந்த எளிமையான தாந்திரீக குறிப்பு இதோ உங்களுக்காக. வாழ்வில் விழுந்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்தால், கூடிய சீக்கிரம் எழலாம். வாழ்க்கையில் விழவே கூடாது என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வாழ்க்கையை பலப்படுத்தி, பாதுகாத்து கொள்ளலாம்.

முன்னேற்றத்தில் வரும் தடையை முறியடிக்கும் பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் கற்பூரவள்ளி இலை. பச்சை கற்பூரம் 2 சின்ன துண்டு, கற்பூரவள்ளி இலை 2, அவ்வளவு தான். இந்த இரண்டு பொருட்களை வைத்து முறையாக தடைகளை தகர்க்க பரிகாரத்தை எப்படி செய்வது. மண் அகல் விளக்கு இருக்குது அல்லவா, அதில் பெரிய அளவில் அகண்ட மண் அகல் விளக்காக வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கற்பூரவள்ளி இலைகளை வைத்துவிட்டு, அதன் மேலே இரண்டு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி விட வேண்டும். நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்பு தயார் செய்த இந்த மண் அகல் விளக்கை வைத்து, பச்சைக் கற்பூரத்தை ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

அந்த நெருப்பு எரிந்து புகை வர தொடங்கும் அல்லவா. அது எரிந்து முடியும் வரை அந்த நெருப்பின் முன்பு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி, பிரச்சினைகள் தீர வேண்டுதல் வைக்க வேண்டும். அவ்வளவு தான். கற்பூரம் எரிந்து அணைந்ததும் நீங்கள் உங்களுடைய வேலையை பார்க்க செல்லலாம். அந்த மண் அகல் விளக்கில் இருக்கும் சாம்பலை கால்படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இதன் மூலம் நமக்கு என்ன நன்மை நடக்கும்.

முன்னேற்றத்தில் ஏதோ ஒரு தடை, தடங்கலாக நிற்கிறது அல்லவா. அந்தத் தடையை உடைக்கக்கூடிய சக்தி இந்த கற்பூரவள்ளி இலைக்கும், பச்சை கற்பூரத்திற்கும் உண்டு. பிரபஞ்சத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய நல்லதை தடுக்கக்கூடிய எந்த ஒரு கெட்ட சக்தியாக இருந்தாலும், அந்த சக்தியை சரி செய்யும் சக்தி இந்த கற்பூரவள்ளி இலைக்கு உண்டு. மகத்துவம் நிறைந்த இந்த கற்பூரவள்ளி இலையை முடிந்தால் ஒரு சிறிய தொட்டியில் வைத்து நிலை வாசல் படியில் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: நம்மையெல்லாம் ஆட்டி வைக்கும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும், நம்மைப் பார்த்து வணங்க தொடங்கிவிடும். தினமும் இந்த 1 பொருளை வீட்டிற்குள் கொண்டு வந்தால்.

வீட்டிற்குள் கண் திருஷ்டி கெட்ட சக்திகள் நுழையாமலும் இருக்கும். இந்த பரிகாரத்தை வாரம் ஒரு முறை செய்து வந்தால் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் வீழ்ச்சி என்பது பெரியதாக இருக்காது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், என்று யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, மண் அகல் விளக்கில், 2 கற்பூரவள்ளி இலை, 2 பச்சை கற்பூரம் வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதன் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -