வாழ்வில் முன்னேற்றம் என்பது வெறும் கனவாகவே உள்ளதா? 3 மாதத்தில் தடைகள் அனைத்தும் விலகி கிடுகிடுவென முன்னேற்றம் பெற செய்யவேண்டிய வழிபாடு.

munnetram pera sivan thiruneeru
- Advertisement -

சிலர் என்னதான் உழைப்பை கொட்டி வேர்வை சிந்தி உழைத்தாலும் முன்னேற்றம் என்பது இருக்காது. ஏதோ ஒருவிதத்தில் தடங்கல், தோல்வி என, மனஉளைச்சல் தான் மிச்சம் என்ற நிலை நீடிக்கும். இந்த நிலையில் இருந்து விடுபட்டு, எடுத்த காரியத்தில் வெற்றி அடைய மிக எளிமையான ஒரு வழிபாடு முறை உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ஒருவருடைய வாழ்க்கையில் அவருக்கு தொடர்ந்து தோல்விகளே கிடைக்கிறது என்றாலும், கஷ்டங்களை மட்டுமே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு வருகிறார் என்றாலும், அவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். இதனை பலப்படுத்துவதற்கு சிவபெருமான் வழிபாடு சிறந்ததாக திகழ்கிறது.

- Advertisement -

தோஷங்களை நீக்கும் பிரதோஷம் என்று ஆன்றோர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட பிரதோஷ தினத்தில் ஒரே சிவாலயத்திற்கு செல்வதற்கு பதிலாக வெவ்வேறு சிவாலயங்களுக்கு சென்று சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பல அறிய பலன்களை பெறுவதோடு மட்டும் அல்லாமல் நமது முன்னேற்றத்திற்கான தடைகள் அனைத்தும் விலகும். இப்போது 5 பிரதோஷ தினத்தில் நாம் கடைபிடிக்க வேண்டியவை குறித்து பார்ப்போம்.

நாம் தொடர்ந்து ஐந்து பிரதோஷதிற்கு, பாடல் பெற்ற ஐந்து சிவ ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் ஒவ்வொரு ஆலயம் என 5 ஆலயங்களுக்கு செல்லவேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது நாம் சிவபெருமானுடைய அபிஷேகத்திற்காக சுத்தமான திருநீற்றை வாங்கிக் கொண்டு போக வேண்டும். அபிஷேகம் செய்த பிறகு அந்த திருநீற்றை மஞ்சள் நிற பட்டு துணியில் வாங்கிக் கொண்டு வர வேண்டும். பட்டுத்துணி இல்லாத பட்சத்தில் புதிய மஞ்சள் நிற ஆடையில் வாங்கலாம்.

- Advertisement -

அப்படி வாங்கி வந்த திருநீற்றை நாம் உடனே நெற்றியில் அணியக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. சேகரித்து வைத்த இந்த அபிஷேக திருநீற்றை அருகில் இருக்கும் சிவாச்சாரியார்களிடம் கொடுத்து, ருத்ர சமகம் செய்து தரும் படி கேட்க வேண்டும். அவர்கள் திருநீற்றில் மந்திரங்களை உருவேற்றி தருவார்கள். பிறகு அந்த திருநீற்றை நாம் தினமும் நம் நெற்றியில் பூசி வர வேண்டும்.

இந்தத் திருநீற்றை நாம் அணிவதால் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் விலகும், பாக்கியங்கள் நம்மை தேடி வரும், தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருக்கும் தோல்விகள் அகன்று விடும், எதையும் சாதிக்க கூடிய உந்து சக்தி கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெரும். இப்படி பல வழிகளில் இந்த திருநீறு நமக்கு நல்ல பலன்களை தரும்.

- Advertisement -