உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி பாருங்கள். வாழ்க்கை உள்ள இன்னல்கள் எல்லம் கண்முன்னே காணாமல் போகும்.

muruga sad lady
- Advertisement -

வாழ்க்கையில் எண்ணிலடங்கா கஷ்டங்களையும் தடைகளையும் அனுபவித்து வரும் மனிதர்களுக்கு உறுதுணையாக விளங்கி அவர்களுடைய கஷ்டங்களையும் தடைகளையும் தகர்க்கக் கூடியவராக திகழ்பவரே முருகப் பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அவருக்குரிய முக்கியமான மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முருகன் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது அழகும் அறிவும் தான். சில பெண்கள் முருகனைப் போல் எனக்கு அழகான அறிவான ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டுவார்கள். அதனால் தான் குழந்தை பாக்கியம் வேண்டு சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அப்படி விரதம் இருப்பதால் முருகப்பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான மந்திரமாக கருதப்படுவது தான் இந்த மந்திரம். காரணம் இந்த மந்திரத்தை சிவபெருமான் முருகனுக்காக அருளிய மந்திரம் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மந்திரத்தை நாம் செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லும் போது நம்முடைய வாழ்க்கையே மாறும் என்பது மறுக்க முடியாத உண்மை.

செய்வாய்க்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் முதலில் விநாயகரை வணங்க வேண்டும். பிறகு முருகரின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து அவரைப் பார்த்தவாறு 108 முறை நிறுத்தி நிதானமாக கூற வேண்டும். பொதுவாக எந்த மந்திரமாக இருந்தாலும் அதை நாம் அவசரம் அவசரமாக கூறக் கூடாது. நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து கூற வேண்டும். இவ்வாறு கூறுவதால் நமக்கு எண்ணில் அடங்காத பலன்கள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

“ஓம் நமோ குமாராய நம”
இதுவே அந்த சிறப்பு மிகுந்த மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம்முடைய கைகளில் முருகனின் பிரசாதமாக திருநீற்றை வைத்துக் கொள்ள வேண்டும் 108 முறை கூறிய பிறகு அந்த திருநீற்றை தனியாக வேறு ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விபூதியை நாம் தினமும் நெற்றியில் வைத்து வர நம்முடைய தலைவிதையே மாறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் எப்போதும் தாராளமாக புழங்க இதை மட்டும் தினமும் உங்கள் கைகளில் கொஞ்சம் பூசிக் கொண்டால் போதும் பணத்தை காந்தம் போல ஈர்த்து நிரந்தரமாக கையில் தக்க வைத்து கொள்ளும்.

மேலும் இந்த விபூதி நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் திகழும். இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதால் நமக்கு இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தடைகள் அனைத்தும் தகர்ந்தெறியும். நோய்கள் தீரும். கடன் பிரச்சினைகள் அகலும். மனக்கவலைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும், செல்வமும், செல்வாக்கும் உயரும்.

- Advertisement -