நம்மை கஷ்டப்படுத்த நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்தும், தீராத நோயிலிருந்து மீளவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். எதிரிகளின் தொல்லை நீங்கி நோய் நொடி இன்றி இன்பமாய் வாழலாம்.

- Advertisement -

இப்போதெல்லாம் இரவும் பகலும் பாடுபட்டு சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மருத்துவ செலவிற்கு சென்று விடுகிறது என்றே சொல்லலாம். இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவராவது தினமும் மருந்து மாத்திரை உட்கொள்ளும் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில வியாதிகள் எத்தனை வைத்தியம் பார்த்தும் சரியாகாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படியானவர்களுக்கு இந்த மந்திரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

இப்படி நோயினால் வதைவது ஒரு புறம் இருந்தாலும், எப்படியாவது பாடுபட்டு முன்னுக்கு வரவேண்டும் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் பின்னாடி இருந்து நம்மை தள்ளிவிட பதம் பார்க்கும் எதிரிகள் தொல்லை இதைவிட கொடுமையாக இருக்கும். இந்த தொல்லைகளிலிருந்தும் வியாதிகளில் இருந்தும் நாம் முழுவதுமாக விலகி நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ ஒரு சில மந்திரங்கள் நமக்கு துணை நிற்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரி தொல்லை பிணி தொல்லை நீங்க மந்திரம்
முருகப்பெருமானை மனம் உருக வேண்டி எதை கேட்டாலும் அதை நிச்சயம் தருவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அசுரர்களை வதம் செய்து பக்தர்களை காப்பதில் முருகரைப் போல சிறந்த தெய்வம் யாரும் இல்லை. அதே போல் அவர் சித்தராக இருந்து பின் கடவுளாக மாறி அவதாரம் எடுத்ததாகவும் ஒரு சில புராணங்கள் உண்டு. அப்படியான இந்த தெய்வத்தை வணங்குவது நம்முடைய இந்த இரண்டு பிரச்சனைக்கும் சரியான தீர்வாக சொல்லப்படுகிறது.

ஓம் பால சுப்பிரமணிய மகா தேவி புத்ரா சுவாமி வர வர ஸ்வாஹா
என்கிற இந்த மந்திரத்தை சொல்ல நாம் விரதம் பூஜை என்று எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டியது கிடையாது. நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை ஜெபித்தாலே போதும். அதே போல் இதை தொடங்குவதற்கான கால நேரமும் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் மனதார இந்த மந்திரத்தை ஜெபித்தாலே போதும்.

- Advertisement -

கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு பேச கூட முடியாத நிலைமையில் உள்ளவர்கள் மட்டும் அவர்களை சார்ந்தவர்கள் அவர்களின் அருகில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம் மற்றபடி நோயினால் பாதித்தவரே இந்த மந்திரத்தை சொல்ல முடியும் எனில் அவர்கள் சொன்னால் இன்னும் இது சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதே போல் உங்களை யாரேனும் ஒரு எதிரி அழிக்க நினைக்கிறார். அது கண்ணுக்குத் தெரிந்த எதிரி தெரியாத எதிரி என யாராக இருந்தாலும் உங்கள் மனதுக்குள் இந்த பிரச்சனையிலிருந்து நான் தப்பிக்க வேண்டும் என வேண்டி இந்த மந்திரத்தை ஜெபித்தால் அதிலிருந்து வெளிவருவதற்காக வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் வாங்க நினைக்கும் தங்கத்தை விட பல மடங்கு அதிகமாக தங்கம் வாங்க ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்து விடுங்கள். தங்கம் மடமடவென்று குவிய தொடங்கி விடும்.

அகையால் நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து உங்களின் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர வழி தேடிக் கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -