புதினாக் கீரையில் மட்டுமல்ல இந்தக் கீரையில் துவையல் செய்தாலும் உடம்பில் பல பிரச்சனைகள் தீரும் தெரிந்து கொள்ளுங்கள்!

murungai-keerai-thuvaiyal2
- Advertisement -

துவையல் என்றாலே நமக்கு தேங்காய் துவையல், புதினாத் துவையல் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். புதினா துவையல் உடன் ஒரு குண்டான் சோறு இருந்தாலும் நமக்கு பத்தவே பத்தாது. அந்த வகையில் இந்த ஒரு கீரையைப் பயன்படுத்தி துவையல் செய்தால் உடலில் இருக்கும் பல்வேறு கோளாறுகள் நீங்கி விடும். கீரை வகையிலேயே இந்த கீரை ராஜாவாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. அப்படி எந்த கீரையை வைத்து நாம் துவையல் செய்யப் போகிறோம்? அதை எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

murungai-keerai-thuvaiyal

குறிப்பாக பெண்கள் இந்த கீரை வகையை துவையலாக அல்லது வேறு வகையில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உடல் பலம் பெறுவார்கள். ரத்த சோகை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரை வகையும் இது தான். அது வேற எதுவும் இல்லைங்க. நம்ம வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் முருங்கைக்கீரை தான் அது. முருங்கையில் இருக்கும் சத்துக்களின் மகிமையை எல்லோருமே அறிந்து வைத்திருப்பார்கள். அதை துவையலாக எப்படி செய்து சாப்பிடுவது?

- Advertisement -

முருங்கைக் கீரை துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
1 கப் – முருங்கைக்கீரை (இளசு), 50 கிராம் – உளுத்தம் பருப்பு, 10 – காய்ந்த மிளகாய், 1 – வெங்காயம், 4 பல் – பூண்டு, 1/2 டீஸ்பூன் – கடுகு, புளி – சிறிதளவு எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவிற்கு.

Murungai keerai

முருங்கைக் கீரை துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் முருங்கைக் கீரையை உருவி சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைக்கவும். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய்களை தாளித்து உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

- Advertisement -

பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக் கீரை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சிறிதளவு புளி போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும். அதன் பின்னர் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சேர்த்தால் முருங்கைக் கீரை துவையல் அட்டகாசமான சுவையில் தயாராகி விட்டிருக்கும்.

murungai-keerai-thuvaiyal1

இதனை சூடான இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவை மட்டுமல்ல முருங்கைக்கீரை ஆரோக்கியமான உணவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முருங்கைக் கீரையை அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்த சோகையை விரட்டியடிக்கலாம். முழு உடல் ஆரோக்கியமும் பெறலாம்.

- Advertisement -

Murungai keerai

முருங்கைக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடல் சூடு தணியும். ரத்த விருத்தி உண்டாகும். சுவாச கோளாறுகள் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கை, கால், உடல் சோர்வு நீங்கும். அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு இதனை செய்து கொடுத்தால் விரைவாக பிரச்சனை தீரும்.

இதையும் படிக்கலாமே
வெங்காயம் இல்லாமல், வெறும் தக்காளியை வைத்து ஒரு புதுவிதமான குழம்பு. வெங்காயம் விக்கிற விலைக்கு, வெங்காயம் போட்டு குழம்பு எல்லாம் வைக்க முடியாது என்பவர்களுக்கு மட்டும் இந்த டிஷ்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -