வீட்டில் இருக்கும் பெண்கள் இதையெல்லாம் செய்வதால் கூட, அவர்களுக்கு சீக்கிரமே முதுமை தோற்றம் வந்து விடுமாம் தெரியுமா?.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் சிறு வயது பிள்ளைகளுக்கு கூட அதிக வயதானது போல தோற்றம் வந்து விடுகிறது. அதிலும் 30 வயதை கடந்த பெண்மணிகளுக்கு ஏதோ 50 வயது ஆனவர்கள் போல முகம் முதிர்ச்சி அடைந்து வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கான காரணமும், அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

30 வயதை கடந்தவர்களுக்கு ஒரு சில சரும மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை தான். ஆனால் இதை நினைத்து பெரிதாக கவலை கொள்ளும் போது அதனாலயே அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி இந்த முகச் சுருக்கம் வந்து விடுகிறது. முகச் சுருக்கம் ஏற்பட மிக முக்கியமான காரணமே மன அழுத்தம் தான். இந்த வயதில் தோன்றும் சாதாரணமான இந்த மாற்றங்களை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் இதை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முறையாக செய்தாலே போதும் என்றும் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.

- Advertisement -

இந்த முதுமைத் தோற்றம் வெளியே வேலைக்கு செல்பவர்களை விட, வீட்டில் இருப்பவர்களுக்கு தான் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. காரணம் நாம் வீட்டில் தானே இருக்கிறோம் என்று அலட்சியத்தோடு அவர்கள் தங்களுக்கென எந்த அக்கறையும், பராமரிப்பையும் செய்து கொள்வதில்லை

முக சுருக்கமும், வயதான தோற்றமும் வராமல் இருக்க தினம் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் நல்ல ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் விட முக்கியமான ஒன்று சரியான தூக்கம். நேரம் கடந்து தூங்கும் போது கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு அதனால் கட்டாயமாக முகப் பொலிவு இல்லாமல் போய் விடும்.

- Advertisement -

இந்த சின்ன சின்ன விஷயங்களை சரி வர செய்த பிறகு, நாம் வீட்டிலே இந்த ஒரு சில பொருட்களை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்து வரும் போது முகம் ஆனது முதுமை தோற்றம் வராமல் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க முடியும்.

இதற்கு பப்பாளி பழம் ஒரு நல்ல தீர்வு. இது நிறத்தை கூட்டுவதுடன் முகத்தை எப்போதும் பொலிவாகவும், இளமையுடனும் வைத்திருக்கும். பப்பாளி பழத்தை கூழ் போல குழைத்து அதை முகத்தில் பேக் போட்டு அதன் பிறகு மசாஜ் செய்து முகத்தை அலம்ப வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்தாலே போதும். உங்கள் முகம் முதுமை தோற்றம் வராததோடு, நல்ல நிறமாகவும் இருக்கும். இந்த பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதாலும் உடல் ஆரோக்கியத்துடன், நல்ல அழகையும் பெற முடியும்.

- Advertisement -

அடுத்து கேரட்யும் பயன்படுத்தலாம். கேரட்டையும் இதே போல பேஸ்ட் போல செய்து முகத்தில் பேக் போட்டு அதன் பிறகு முகத்தை மசாஜ் செய்து சுத்தம் செய்யலாம். இந்த முறையிலும் நல்ல முக தோற்றத்தை பெறலாம்.

இவை இரண்டுமே செய்ய முடியாதவர்கள் கற்றாழை பயன்படுத்தலாம். வீட்டில் வளரும் கற்றாழைச் செடியிலிருந்து மடல்களை எடுத்து அதை தோல் நீக்கி சுத்தம் செய்த பிறகு ஜெல்லை மட்டும் எடுத்து பேஸ்ட் ஆக்கி, அந்த பேஸ்ட்டை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் விட்டு அதன் பிறகு மசாஜ் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் நல்ல நிறம் ஆவதுடன், முகம் எப்போதும் பள பளப்பாகவும், பொலிவுடனும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 3 நாட்களில் அழகான பிங்க் லிப்ஸை பெற, உதட்டின் மேல் இதை தடவுங்கள் போதும். ரோஜா இதழுக்கும் உங்கள் உதட்டிற்கும் வித்தியாசமே தெரியாது.

இந்த சின்ன சின்ன விஷயங்கள் கடைபிடித்து அத்துடன் இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தினால் போதும். உங்களின் பெரிய மனக் குறையான முதுமை தோற்றம் என்பது விரைவில் வராமல் தடுத்து விடலாம்.

- Advertisement -