நாண் சாப்பிட இனி ஹோட்டலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லைங்க. ரொம்ப சிம்பிளா பர்பெக்ட்டான ஹோட்டல் ஸ்டைல் நாண் வீட்டிலேயே செய்திடலாம்

naan
- Advertisement -

பூரி சப்பாத்தி வகைகளிலே இந்த நாண் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இதை பெரும்பாலும் வீட்டில் செய்ய முடியாது கடைகளில் வாங்கித் தான் சாப்பிட வேண்டும். இப்போது நாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் ஹோட்டல்களில் கிடைக்கும் இந்த நாணை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க இந்த நாண் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இதை செய்வதற்கு முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள. அதில் 1 கப் மைதா மாவு, 1 கப் கோதுமை மாவு, 1 டீஸ்பூன் சர்க்கரை, 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர், 1/4 கப் தயிர், 1/4 ஸ்பூன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் இவையெல்லாம் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து லேசாக தண்ணீர் தெளித்து, தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைந்து கொள்ளுங்கள். பரோட்டாவுக்கு செய்வதை போல் மாவை அடித்து பிசைய வேண்டிய அவசியம் இல்லை சாதாரணமாக பிசைந்து வைத்தாலே போதும். பிசைந்த இந்த மாவின் மேலே லேசாக எண்ணெய் தடவி 1 மணி நேரம் வரை மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

அடுத்து 1 மணி நேரம் கழித்து மாவை ஒரு மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை சப்பாத்தி, பூரி செய்வது போல் மொத்தமாக மாவை உருட்டி வைத்துக் கொண்டு செய்ய முடியாது. ஒவ்வொன்றாக தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்போது எடுத்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து கொள்ளுங்கள். மாவை கை வைத்து லேசாக அழுத்தி அதன் மேல் எள், கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி அழுத்திய பிறகு மாவை திருப்பி வைத்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டுங்கள். இதை வட்டமாக திரட்டாமல் கடைகளில் இருக்கும் நாண் போல ஓவல் சைஸில் திரட்டிக் கொள்ளுங்கள். மாவை திரட்டும் போது மேலே கொஞ்சம் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஏதாவது ஒரு மாவை சேர்த்து விரட்டினால் சரியாக வரும்.

திரட்டிய இந்த மாவின் மீது லேசாக தண்ணீர் தெளித்து பரவலாக தேய்த்து விடுங்கள். அதற்குள் அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். இதற்கு பிடி இருக்கும் தோசை கல்லாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாண் செய்ய வரும். தோசைக் கல் நல்ல சூட்டுடன் இருக்கும் போது தண்ணீர் தேய்த்த பக்கத்தை தோசை கல்லில் ஒட்டி விட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு மூடி போட்டு ஒரு நிமிஷம் வரை வேக விடுங்கள். பிறகு மூடியை எடுத்து விட்டு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி அப்படியே தோசை கல்லை அடுப்பின் பக்கமாக திரும்பி காட்டுங்கள். நாண் பர்பெக்டாக ஹோட்டல் செய்யப்படுவதை போல மேலே உப்பி அழகாக வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: எல்லா வகையான டிபன் மற்றும் சாதத்துக்கும் அருமையான தக்காளி குழம்பு செய்ய கொஞ்சம் இதையும் வறுத்து அரைச்சு போட்டு பாருங்க வீடே மணக்கும்!

கடைசியாக மேல கொஞ்சம் பட்டர் தடவி எடுத்து விடுங்கள். ஹோட்டல் ஸ்டைல் பர்ஃபெக்ட்டான நாண் ரெடி. இந்த சிம்பிளான நாண் ரெசிபி நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

- Advertisement -