இந்தப் பிள்ளையாரை கொண்டு வந்து வீட்டில் வச்சுட்டீங்கன்னா போதும். சண்டை சச்சரவே வராது. சண்டைக்கு மூல காரணமாக இருக்கும் அந்த ஒரு விஷயமும் உங்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடும்.

pillaiyar
- Advertisement -

நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. மன நிம்மதி இருக்க வேண்டும். சண்டை சச்சரவுக்கு மூல காரணமாக இருக்கக்கூடிய அந்த ஒரு முக்கியமாக விஷயமும் வீட்டில் இருக்கவே கூடாது. அது விஷயம் என்னவாக இருக்கும். பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் கணவன் மனைவிக்குள், சகோதரர் சகோதரிக்குள் பிரச்சனை வரும் என்றால் எதற்காக இருக்கும். உங்களால் யூகிக்க முடிகிறதா. கெஸ் பண்ண முடிஞ்சா, மனதில் கெஸ் பண்ணி வச்சுக்கோங்க. அது என்ன பிரச்சனை என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம். சண்டை சச்சரவுக்கு மூல காரணமாக இருக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை வெளியேற்றி, குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வர ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான குறிப்பையும், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். குடும்ப ஒற்றுமைக்கு இந்த சின்ன பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.

குடும்ப ஒற்றுமைக்கு வீட்டில் வைக்க வேண்டிய பிள்ளையார் படம்:
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே ஒரு வீட்டில் சண்டை என்பது இருக்காது. இனிமேல் சேர்ந்து இறப்பதற்கு கூட வாய்ப்பு உண்டு. ஆனால் இப்படி குடும்பமாக சேர்ந்து பிறப்பதற்கு வாய்ப்பு உண்டா. என்று யோசித்துப் பாருங்கள். பிறப்பு என்பது ஒரு முறை தான். அதை சந்தோஷமாக அனுபவித்து வாழ்வோமே. சரி, குடும்ப ஒற்றுமைக்கு நம்முடைய வீட்டில் என்ன படம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா. நாட்டிய கணபதியின் திருவுருவப்படத்தை நம் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யனும்.

- Advertisement -

இந்த சுவாமியின் படத்தை பூஜை அறையிலும் வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மாட்டி வைப்பது இன்னும் சிறப்பு. குடும்ப உறவுகளுடன் ஒன்றாக அதிக நேரம் வரவேற்பறையில் தானே நாம் நேரத்தை கழிப்போம்.  தினமும் விளக்கு ஏற்றும்போது இந்த விநாயகருக்கும் ஊதுவத்தி காண்பியுங்கள் போதும்.

இந்த திருவுருவ படத்தை பார்க்கும் போதெல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தோன்றும். சரிங்க, இந்த கணபதியை வீட்டில் வைத்தால் சந்தோஷம் கெட்டுப் போக மூலகாரணமாக இருக்கும் அந்த ஒரு விஷயம் வெளியே சென்று விடும் என்று சொன்னீர்களே, அது என்ன விஷயம். பணம் தாங்க. பணம் சம்பந்தமாக தானே நம்முடைய வீட்டில் பிரச்சனைகளை ஆரம்பிக்கிறது. தேவைக்கு குறைவாக பணமிருந்தாலும் பிரச்சனை. தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் பிரச்சனை. ஆகவே அளவோடு பணத்தை சம்பாதித்து, அளவோடு செலவு செய்வதிலேயே நிம்மதி கிடைக்கும். கடன் இல்லாமல், வருமானத்திற்கு பிரச்சனை வராமல், நிறைவான செல்வ வளத்தை கொடுக்கக் கூடிய சக்தியும் இந்த நாட்டிய கணபதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இரண்டு ஏலக்காயை வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனைகள், துன்பங்கள், மனக்குழப்பங்கள், வேதனைகள் அனைத்தையும் போக்கி இன்பமாக வாழ வைப்பார்.

ஆகவே உங்கள் வீட்டில் சண்டை வருவதற்கு மூலகாரணமாக இருக்கும் வறுமையையும் பணக்கஷ்டத்தையும், இந்த நாட்டிய கணபதி வீட்டை விட்டு வெளியே விரட்டி விடுவார், நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -