இந்த பரிகாரத்தை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அடமானத்தில் இருக்கும் நகைகள் அனைத்தும் வீடு திரும்பும்.

lakshmi jewel money
- Advertisement -

ஒரு பெண்ணிற்கு அழகே அவள் முகத்தில் இருக்கும் புன்னகை தான். அந்த புன்னகையை வரவழைக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக இருப்பது தான் பொன் நகை. எந்த பெண்ணாக இருந்தாலும் ஒரு நகையை அவளிடம் தரும்பொழுது அவளை அறியாமலேயே அவள் முகத்தில் புன்னகை மலர்ந்து விடும். எந்த பெண்ணின் முகத்தில் புன்னகை இருக்கிறதோ அந்த பெண் குடியிருக்கும் வீட்டில் மகாலட்சுமி வீற்றிருப்பாள். அப்படிப்பட்ட பொன் நகைகள் அடமானத்திற்கு சென்று விட்டால், அந்தப் பெண்ணின் முகத்தில் இருக்கும் புன்னகையும் சென்று விடும். இவை இரண்டையும் மீட்டுக் கொடுப்பதற்கும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம் முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த இடத்தில் பொன் நகை இருக்கின்றதோ அந்த இடத்தில் மகாலட்சுமி வீற்றிருப்பாள். அவ்வாறு பொன் நகையில் வீற்றிருக்கும் மகாலட்சுமியை நாம் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக அடமானக் கடையில் கொண்டு சென்று வைக்கும் பொழுது அந்த நகையுடன் நம் வீட்டு மகாலட்சுமியும் சென்று விடுவாள் என்று கூறப்படுகிறது. ஒரு முறை நாம் அடமானத்தில் நகையை வைத்து விட்டால் அதை திருப்புவதற்கு மிகவும் சிரமப்படுவோம். மேலும் நம்மால் புதிதாக நகைகளை வாங்குவதும் மிகவும் கடினமாக இருக்கும். அதற்கு காரணம் நம் வீட்டில் இருந்த மகாலட்சுமி வெளியே சென்றது தான்.

- Advertisement -

ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் அடமானம் வைத்த அந்த நகையால் நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் சென்று விடும் பட்சத்தில், திரும்பவும் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காகவும், அடமானம் வைத்த நகைகளை திருப்புவதற்காகவும் பல பரிகாரங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த பரிகாரங்களில் மிகவும் எளிமையான பரிகாரத்தை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு நெல்லிக்கனி இருந்தாலே போதும்.

மகாலட்சுமிக்கு உகந்த கனிகளில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்கனி ஆகும். இந்த நெல்லிக்கனியை மகாலட்சுமியின் அருள் பெற்ற வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் மகாலட்சுமியாக இருக்கக்கூடிய பெண்கள் தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் அந்த பெண்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். அவ்வாறு கிடைப்பதன் மூலம் அவர்களுக்கு தங்க நகைகள் சேரும். மேலும் இந்த நெல்லிக்கனியில் பல உயரிய சத்துக்கள் இருப்பதால் அது பெண்களுக்கு பல நன்மைகளையும் வழங்கும்.

- Advertisement -

பணக்கார தெய்வம் என்று கூறியவுடன் நம் நினைவிற்கு வரக்கூடிய முதல் தெய்வம் பெருமாள். தன்னகத்தே மகாலட்சுமியை வைத்திருப்பதால் தான் அவரை பணக்கார தெய்வம் என்று நாம் கூறுகிறோம். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அன்று அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த அந்த துளசியில் சிறிதளவு நம் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். அந்த துளசியை நகை வைத்திருக்கும் இடத்திலோ அல்லது பணம் வைத்திருக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பெருமாள் கோவிலில் இருந்து துளசியை வாங்கி வந்து நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். பழைய துளசியை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகைகளை தெரியாமல் கூட இந்த இடத்தில் வைக்காதீர்கள் ஸ்வர்ணம் சேரவே சேராது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது!

இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு பெருமாளின் அருள் ஆசி கிடைக்கும். பெருமாளின் ஆசி கிடைத்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். பிறகு என்ன வீட்டில் நகையும் பணமும் எந்தவித பஞ்சமும் இன்றி கிடைத்து, பெண்களின் முகத்தில் புன்னகை என்றும் நிலைத்திருக்கும்.

- Advertisement -