நகையும், பணமும் தானாக உங்களைத் தேடி வர இதை மட்டும் தவறாமல் செய்து வந்தாலே போதும். தன ஆகர்ஷணத்தை இழுத்துக் கொடுக்கும் அற்புதமான எளிய பரிகாரம்.

kuberar coin
- Advertisement -

பணமும், நகையும் எவ்வளவு சேர்ந்தாலும் போதாது என்று நினைக்கும் இந்த காலத்தில் தினம், தினம் அந்த பணத்தை சம்பாதிக்க போராடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அது மட்டுமின்றி தன் வாழ்நாளில் கொஞ்சமாவது நகைகள் சேர்த்து ஆசை தீர அனுபவிக்க மாட்டோமா என்ன ஏங்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது அவர்களின் கனவுகள் அனைத்தும் நினைவாகும் என்று சொல்லப்படுகிறது. வாங்க அது என்ன பரிகாரம் எப்படி செய்வது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணம், நகை சேர வேண்டும் என்று நினைப்பதோடு நிறுத்தி விடாமல், அதற்கான உழைப்பையும் முயற்சியும் நாம் எடுக்க வேண்டும். அப்படி செய்தும் கூட சில இடங்களில் பணம் தங்காமல், வருமானமும் கூடாமல் செலவு அதிகரித்துக் கொண்டு செல்வது, வீட்டில் நகை தங்காமல் போவது போன்ற நிகழ்வுகள் தொடரும். அதையெல்லாம் சரி செய்ய நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு தேவை ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான்.

- Advertisement -

பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுவது எத்தனை சிறப்பு என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கண்ணாடியானது எங்கே இருக்கிறதோ, அதன் மீது எந்த பிம்பமானது படுகிறதோ, அதன் பிரதிபலிப்பை அது இருக்கும் இடம் முழுவதும் பரப்பும். அப்படியான இந்த கண்ணாடியை  பயன்படுத்தி தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம்.

வீட்டில் நகை பணம் சேருவதற்கான எளிய பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு சின்ன குபேரர் சிலை கண்டிப்பாக வேண்டும். உங்கள் பூஜை அறையில் இந்த குபேரர் சிலையை வடக்கு நோக்கி அமர வைத்து விடுங்கள். ஒரு சிறிய கண்ணாடியை அவர் முகம் பார்க்கும் படி வைத்து விடுங்கள் போதும். இந்தக் கண்ணாடியில் அவரின் உருவம் பட்டு அந்த உருவத்தின் பிரதிபலிப்பு தெரியும். அதில் இருந்து பரவும் கண்ணுக்கு தெரியாத ஒளிக்கதிர்கள் மூலம் உங்கள் வீட்டில் பணம், நகை சேர்வதற்கான வாய்ப்புகள் தானாக தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பணம், நகை சேர்வதற்கு இன்னொரு பரிகாரத்தையும் செய்யலாம். இது அனைத்து மதத்தினரும் செய்யக் கூடிய ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு பவுல் எடுத்து கொள்ளுங்கள். அது சில்வர் அல்லது கண்ணாடி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் நிறைய சில்லறை காசுகளையும் சில ரூபாய் நோட்டுகளையும் வைத்து விடுங்கள்.

வீட்டில் குண்டுமணி அளவு சின்ன தங்கம் ஏதாவது இருந்தால் வைக்கலாம். இல்லையென்றால் கவரிங் நகை கூட வைக்கலாம். இந்த பவுலை உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள். அதன் எதிரில் இதே போல் சின்ன கண்ணாடியை வைத்து விடுங்கள். இதுவும் அதே போல தான் பௌலில் இருக்கும் நகையும், பணமும் கண்ணாடியில் பட்டு அந்த பிம்பம் பிரதிபலிக்கும் போதும் நம்மை தேடி பணம் நகை சேர்வதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பவுலில் இருக்கும் பணத்தை எடுத்து நாம் செலவு செய்து கொள்ளலாம். அதில் இருக்கும் பணத்தை அவசர தேவைக்கு எடுத்து விட்டால் மீண்டும் கையில் பணம் வரும் போது சில்லறையாக மாற்றி அதில் வைத்து விடுங்கள். இது எப்பொழுதும் உங்கள் வரவேற்பு அறையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இதற்கு எதிரில் கண்ணாடியும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த இலை ஒரு கட்டு இருந்தால் போதும். பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்.

இந்த ஒரு எளிய பரிகாரம் உங்கள் வீட்டில் நகை பணம் எல்லாம் உங்களை தேடி வர வைக்கக் கூடிய நல்ல நேர்மறை ஆற்றலை உருவாக்க கூடியவை. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -