குண்டுமணி தங்கம் கூட தன்னிடம் இல்லையே என்று வருத்தப்படுபவர்கள், இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்களிடம் எத்தனை சவரன் நகை இருக்கிறது என்று உங்களுக்கே தெரியாத அளவிற்கு நகை சேரும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் இன்னமும் கூட சில குடும்பங்களில் ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யதால் அதிகமாக தங்க நகைகள் சேரும் வாய்ப்பு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு காலத்தில் வெறும் அணிகலனாக மட்டும் பார்க்கப்பட்ட தங்க நகைகள் இன்று மிகப் பெரிய சொத்தாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சில குடும்பங்களில் இந்த நகைகள் தான் பல நேரங்களில் அவர்களின் வாழ்வாதாரத்தை சரி செய்ய பயன்படும் பொருளாக உள்ளது. இந்த காரணங்களாலே தான் இன்று தங்க நகைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழுந்து உள்ளது. சரி அந்த தங்க நகை சேர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தங்க நகை அதிகம் சேர செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு உங்கள் வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு சின்ன மூக்குத்தியை காணிக்கையாக வாங்கி செலுத்தி விடுங்கள். ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லை என்று தான் இந்த பரிகாரத்தையே செய்கிறோம். அதற்கும் தங்கத்தையே வாங்கி கடவுளுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்றால் எப்படி என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம்.

அம்மனுக்கு நீங்கள் வாங்கி கொடுக்கும் சின்ன குண்டுமணி அளவு தங்கமானது, உங்களிடம் திரும்பவும் பல மடங்காக பெருகி வரும் வாய்ப்பை பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. எனவே கொஞ்சம் சிரமப்பட்டாவது இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்ய தான் வேண்டும். இதை செய்த பிறகு அம்மனுக்கு மலர் சாற்றி தீபமேற்றி வழிபட்ட பிறகு உங்களால் முடிந்த வரையில் யாரேனும் ஒருவருக்கு உணவு வாங்கி கொடுங்கள்.

- Advertisement -

நம்முடைய பழங்காலத்திலிருந்து நம் குடும்பம் உண்ண உணவு, இருக்க இடம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டி நம் முன்னோர்கள் ஆலயங்களுக்கு பல பொருட்களை கொடையாக வழங்கி வந்திருக்கிறார்கள். இப்படி ஆலயங்களுக்கு நாம் வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் பின்னும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் தங்களுடைய வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது என்றும் நம்பினார்கள்.

அதே போன்றதொரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த ஒரு பரிகாரத்தையும் நாம் செய்ய வேண்டும். அம்மனுக்கு நீங்கள் சாற்றும் அந்த ஒரு குண்டுமணி தங்கமானது, உங்களுக்கு மேலும் மேலும் தங்கத்தை சேர்க்கும் வாய்ப்பைத் தேடித் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு சிறு பொருளை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தால் போதும். செல்வ செழிப்புடன் கூடிய ஆரோகோயாமான வாழ்வை பெற இது உதவும்.

தங்கம் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுடன் இந்த ஒரு சிறிய பரிகாரத்தையும் செய்தால், தங்கமே இல்லையே என்று வருத்தப்பட்டவர்கள் வீட்டில் போதும் என்கிற அளவிற்கு தங்கம் சேரும் நிலை ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்து அந்த அம்பிகையின் அருளாசியுடன் தங்கம் சேர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வு எல்லா வளமும் நலனும் பெற்று வாழலாம்.

- Advertisement -