நல்ல வேலை கிடைக்க பரிகாரம்

nalla velai kidaikka
- Advertisement -

தற்காலத்தில் எவ்வளவு லட்சங்களை செலவழித்து கல்வி கற்றாலும், அந்த கல்விக்கேற்ற வேலை கிடைக்காமல், தங்களின் கல்வித் தகுதிக்கும் குறைவான பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். எனினும் தீவிரமான விடாமுயற்சியு மற்றும் நம்பிக்கையுடன் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் நீங்கி, விரைவில் அவர்களுக்கு விரும்பிய நல்ல வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நல்ல வேலை கிடைக்க பரிகாரம்

தங்களின் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள், கீழ்கண்ட பரிகாரத்தை 9 சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும். எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஒரு வளர்பிறை சனிக்கிழமை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக, உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அல்லது பெருமாள் கோவிலில் இருக்கின்ற நரசிம்மர் சந்நிதிக்கு சென்று, நரசிம்மரையும் தாயாரையும் வணங்கி, 16 நெய் தீபங்களை ஏற்றி, அந்த சன்னதியில் அமர்ந்து “எனக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க வேண்டும்” என லட்சுமி நரசிம்மரை மனதார வேண்டி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 சனிக்கிழமைகள் முறையாக செய்பவர்களுக்கு கூடிய விரைவில் அவர்கள் விரும்பிய வண்ணம் நல்ல வேலை கிடைக்கும்.

- Advertisement -

நல்லவேளை கிடைக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட பரிகாரத்தை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளாக செய்தால் மட்டுமே விரும்பிய பலனை பெற முடியும். ஒரு கிலோ அளவு கருப்பு உளுந்து, ஒரு கிலோ அளவிற்கு நிலக்கரி ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட புதிதான கருப்பு நிற துணியை வாங்கி அதில் மேற் சொன்ன கருப்பு உளுந்து, நிலக்கரி ஆகிய இரண்டையும் போட்டு நன்றாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு யாருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ன விரும்புகிறீர்களோ, அவர்களின் தலை மற்றும் உடலை இந்த மூட்டையை கொண்டு 21 முறை வலது புறமாக திருஷ்டி சுற்றுவது போல சுற்ற வேண்டும். பிறகு இந்த மூட்டையை ஓடும் ஆற்று நீரிலோ அல்லது கடலிலோ விட்டுவிட வேண்டும். பிறகு அந்த இடத்திலேயே நின்று வேலை பெற நினைப்பவர்கள் ஆஞ்சநேயரை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மாதத்தில் வருகின்ற எந்த ஒரு சனிக்கிழமையிலும் காலை எழுந்து, குளித்து முடித்துவிட்டு, அருகில் இருக்கின்ற விநாயகர் கோயிலுக்கு சென்று, விநாயகர் வழிபாடு செய்த பிறகு, அந்த கோயிலிலேயே ஐயப்பன் சன்னதி இருந்தால், ஐயப்பனையும் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினமே மதியம் 1.30 முதல் 3 அரை மணி வரை வரும் எமகண்ட நேரத்தில், உங்கள் ஊரில் அரச மரத்தடி பிள்ளையார் இருக்கும் பட்சத்தில் 7, 9 அல்லது 11 எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். நெய் ஊற்றி தீபம் ஏற்ற கூடாது. அரச மரத்தடி விநாயகர் இல்லையென்றால் மற்ற எந்த விநாயகர் சந்நிதியிலும் இந்த தீபங்களை ஏற்றலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பணம் பெருக பரிகாரம்

பிறகு அதே தினம் மாலை வேலையில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு ஒரு மண் அகல் விளக்கில் கருப்பு எள் இட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி, அதை உங்கள் கைகளில் ஏந்தியவாறு நவகிரகங்களை 9 முறை வலம் வந்த பிறகு, சனிபகவானுக்கு முன்பாக அந்த தீபத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேற்சொன்ன வழிபாட்டு முறைகளை முறைப்படி கடைபிடிப்பவர்களுக்கு விரைவிலேயே அவர்கள் விரும்பிய வண்ணம் நல்ல வேலை கிடைக்கும்.

- Advertisement -