வேலை கிடைக்காமல் திண்டாடி வருபவர்கள், இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும். கை நிறைய சம்பளத்தோடு, நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வேலை கிடைக்கும்.

cash-agal-vilakku
- Advertisement -

ஏதோ ஒரு வருமானத்தில், ஏதோ ஒரு வேலை கிடைப்பதே இந்த காலத்தில் குதிரை கொம்பாக்கிவிட்டது. அப்படி இருக்கும் போது மனதிற்கு பிடித்த வேலையாக, படித்த படிப்புக்கு வேலை கிடைக்க வேண்டும். நினைத்த சம்பளத்தில் நினைத்த பதவியில் வேலை கிடைக்க வேண்டும், என்றால் அதற்கு ரொம்பவும் போராட வேண்டி இருக்கிறது. நல்ல வேலை கிடைக்காமல் பாக்கெட்டில் பணம் இல்லாமல் திண்டாட கூடிய இளைஞர்கள் எத்தனையோ பேர் இன்றளவும் வீதியில் சுற்றித் திரிகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் முயற்சி செய்யாமல் இருக்கிறார்களா என்ன.

தேடாத வேலையாக இருக்காது. ஏறி இறங்காத கம்பெனியாக இருக்காது. செய்யாத முயற்சியே இருக்காது. வேலை கிடைப்பது போலவே இருக்கும். கைக்கு எட்டின தூரம் வேலை தெரியும். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போயிருக்கும். சில பேர் வேலை தேடி வாழ்க்கையே வெறுத்துப் போய் இருப்பார்கள். நீங்கள் நல்ல வேலையில் இருக்கிறீர்களா அப்படி என்றால், இருக்கின்ற வேலையை நேசித்து செய்யுங்கள்.

- Advertisement -

வேலை இல்லாதவர்கள் படும் கஷ்டம் என்ன என்பது வறுமையில் வாடுபவர்களுக்கு தான் தெரியும். நீங்கள் நல்ல வேலை தேடி அலைகிறீர்களா. உங்களுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டுமா. அந்த வேலையை கிடைக்க விடாமல் தடுக்கக்கூடிய தடைகளை உடைத்து எரியும் ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

நல்ல வேலை கிடைக்க ஏற்ற வேண்டிய விளக்கு:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான பொருள் சந்தனாதி தைலம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காலை அல்லது மாலை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை செய்வதற்கு முன்பு சுத்தபத்தமாக குளித்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, இதில் இரண்டு ஸ்பூன் சந்தனாதி தைலத்தை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்கள் முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கின் தீபச்சுடரை பார்த்து உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடமாவது இந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து விளக்கின் ஒளியில் வேண்டுதல் வைக்க வேண்டும். மிகவும் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பிறகு அந்த விளக்கு எண்ணெய் தீரும் வரை அப்படியே எரியட்டும். நீங்கள் போய் உங்களுடைய மற்ற வேலைகளை பார்க்கலாம். இதை பூஜை அறையின் முன்பாக அமர்ந்து செய்தாலும் சரி அல்லது வரவேற்பறையில் செய்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம். இந்த விளக்கை எங்கே வேண்டுமென்றாலும் ஏற்றி வைத்து நீங்கள் உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம்.

- Advertisement -

சந்தனாதி தைலம் ஒரு அற்புதம் வாய்ந்த தைலம். நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள வைக்க கூடிய வேலையை இது செய்யும். நீங்கள் வைக்கும் வேண்டுதல் இந்த பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து, கூடிய சீக்கிரத்தில் நிறைவேறுவதற்கு இந்த விளக்கு பரிகாரம் உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு ரூபாய் நோட்டில், இந்த 3 பொருட்களை வைத்து மடித்து விட்டால், 3 மடங்கு பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும்.

ஒரே ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி இந்த வேண்டுதலை வைத்தாலே போதும். பிறகு உங்களுடைய வாழ்க்கையில் தடைபட்டு வந்த அந்த நல்லது சீக்கிரம் நடக்கும். முடிந்தால் வாய்ப்பு இருந்தால் வாரம் ஒரு நாள், வேலை கிடைக்கும் வரை இந்த விளக்கை ஏற்றி வேண்டுதல் வையுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -