நல்லதோர் வீணை செய்தே – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஆசை முகம் மறந்து போச்சே – பாரதியார் கவிதை

நல்லதோர் வீணை செய்தே என்று தொடங்கும் இந்த பாரதியார் கவிதை, வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் பாடலாக்கப்பட்டது. கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bharathiyar Kavithai “Nallathor veenai seithen lyrics in Tamil“. This poem was composed as a song in the Tamil movie varumayin niram sivappu. Ilayaraja composed music for that.

- Advertisement -