நல்லது நடக்க சித்திரை மாதத்தில் செய்ய வேண்டியது

suriya bhagavan lady
- Advertisement -

தமிழ் மாதங்கள் இந்த சித்திரை மாதமானது சூரிய மாதம் என்று சொல்லப்படுகிறது. வருடத்தின் முதல் மாதமான சித்திரை ஒன்று மிகவும் விஷேசகரமான நாள் மட்டுமன்று வழிபாட்டிற்குரிய நாள். ஆகையால் தேதி அன்று நம் வழிபாட்டுடன் துவங்குகிறோம். இந்த முறையில் துவங்கும் போது இந்த ஆண்டு முழுவதும் நமக்கு வளமானதாக அமையும் என்பது நம்பிக்கை.

வருடத்தின் முதல் நாளான சித்திரை ஒன்றாம் தேதி வழிபாட்டிற்குரிய சிறப்பு மிக்க நாள். அதே போல் மாதத்தின் முதல் நாளில் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகளும் உண்டு. அதுமட்டுமின்றி அந்த மாதம் முழுவதும் நமக்கு நல்லவையாக அமைய மாதம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய சில சூட்சம பரிகாரங்கள் உண்டு. அதில் ஒன்றை தான் இப்பொழுது நாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சித்திரை மாதத்தில் நல்லது நடக்க

இந்த மாதம் முழுவதும் நமக்கு நல்ல மாதமாக அமைய நாம் ஒவ்வொரு நாளின் துவக்கத்தையும் நல்ல முறையில் துவங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் முதல் வேலையே வாசல் தெளித்து கோலம் போடுவது தான். இந்த முறை இன்று நேற்று அல்ல நம்முடைய தொன்று தொட்டு பின்பற்றி வரும் வழக்கம்.

இதை செய்வதன் மூலம் நம் வீட்டிற்கு நன்மை என்பதோடு சகல தெய்வங்களை நம் வீட்டிற்கு அழைக்கும் ஒரு வழிமுறையாகவும் பின்பற்றி வருகிறோம். அப்படி நாம் தெளிக்கும் இந்த தண்ணீரில் சிறிதளவு பன்னீர் சேர்த்து தெளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

- Advertisement -

அந்த கோலத்தின் நடுவில் மஞ்சள் வைத்து அதன் மேல் மஞ்சள் நிற பூவை வைக்க வேண்டும். இது இந்த சித்திரை மாதம் முழுவதும் செய்ய வேண்டும். அமாவாசை தினத்தில் கோலம் போடுதல் கூடாது. ஆகையால் அந்த நாளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இது போல செய்ய வேண்டும். இப்படி வாசல் தெளித்து கோலம் போடும் போது வீடு மங்களகரமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட செங்கல் பரிகாரம்

இந்த முறையில் நாம் வாசல் தெளித்து கோலம் போட்டு இருக்கும் போது நம் வீட்டிற்கு சகல தெய்வங்களின் வாசமும் கிடைக்கும். இதன் மூலம் அனைத்து நல்லதும் நம் குடும்பத்திற்கு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி குடும்பத்திற்கு நல்லதை தரக் கூடிய இந்த சூட்சம பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமெனில் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -