நாளை என்ற சொல்லையே அறியாத நரசிம்மரை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும். உங்களை பாடாய் படுத்தும் கடன் பிரச்சனைகள் யெல்லாம் நினைத்துப் பார்க்காத நொடியில் தீர்ந்து விடும்.

- Advertisement -

கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான நரசிம்மரை வழிபாடு செய்வதின் மூலம் நம்முடை பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இவரை இவர் அவதரித்த நாளில் வணங்குவது மேலும் சிறப்பு. இந்த வருடம் 4.5.23 நரசிம்மர் அவதரித்த நாள். அன்றைய தினத்தை நாம் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் இவரை நினைத்து வணங்கும் போது பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும். இப்போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர இந்த நரசிம்மமூர்த்தியை எப்படி வணங்குவது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர நரசிம்மர் வழிபாடு:
இந்த வழிபாடு செய்வதற்கு நாளை அதிகாலையிலே கண் விழித்து குளித்து முடித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி உண்ணா விரதத்தை தொடங்கி வேண்டும். உடல் நலம் சரியில்லாமல் விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். இந்த பூஜை மாலை 6 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். ஏனெனில் நரசிம்மர் அவதரித்த நேரம் பிரதோஷ காலம் என்று சொல்லப்படுகிறது எனவே இந்த நேரத்தில் அவரை வழிபடுவது சிறந்தது.

- Advertisement -

நாளை உங்கள் வீட்டின் அருகில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம் இல்லாதவர்கள் வீட்டிலே கூட இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை வீட்டில் செய்வதற்கு நரசிம்மர் படம் வைத்து தான் வணங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நரசிம்மரை நினைத்து ஒரு அகல் தீபத்தில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி கொள்ளுங்கள். இவருக்கு நெய்வேத்தியமாக பால், பானகம் இரண்டையும் படைக்க வேண்டும். இவருக்கு காய்ச்சி ஆற வைத்த பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை பழம் பாக்கு இத்துடன் கொஞ்சம் துளசி இலைகளையும் வைத்து விடுங்கள்.

இவையெல்லாம் செய்த பிறகு அந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த மந்திரத்தையும் 11 முறை சொல்ல வேண்டும் இதற்கு மேலும் இந்த மந்திரத்தை சொல்ல முடிந்தவர்கள் 108 முறை தாராளமாக சொல்லலாம்.
நரசிம்மர் காயத்ரி மந்திரம் :
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத்

- Advertisement -

இந்த பூஜையை முடித்த பிறகு விரதம் இருப்பவர்கள் நெய்வேத்தியமாக படைத்த பாலையும், பாகத்தையும் அருந்திய பிறகு விரதத்தை முடித்து கொள்ளலாம். இந்த நரசிம்மரை கடன் தவிர பிற பிரச்சனைகள் இருந்தால் அவரை உக்கிர மூர்த்தியாகவும், செல்வம் சேர வேண்டும் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அவரை லட்சுமி நரசிம்மராகவும் நினைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: 1 ரூபாய் இருந்தால் போதும். மன நிம்மதியை விலை கொடுத்து வாங்கிடலாம். தீராத கஷ்டத்தில் சிக்கி இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

நரசிம்மரை பொறுத்த வரையில் நாளை என்ற சொல்லையே அறியாதவர் என்று சொல்வார்கள். அப்படியான தெய்வத்திடம் அவரின் பிறந்த தினமான அன்று அவரை நினைத்து விரதம் இருந்து இந்த மந்திரத்தையும் சொல்லி வழிபடும் போது உங்களுடைய வேண்டுதல் எதுவாயினும் அதை உடனே நிறைவேற்றி தருவார். நீங்களும் இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து உங்களின் பிரச்சனைகளில் இருந்தும் வெளியில் வர நரசிம்மரை மனதார வேண்டி கொள்ளுங்கள். இந்தத் தகவலோடு இந்த பதிவினை முடிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -