நாளுக்கு நாள் உங்களுடைய துன்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? தீராத துன்பங்களால் கவலைப்படுகிறீர்களா? இந்த ஒரு மந்திரத்தை 18 முறை ஜபித்துப்பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

Narasimhar manthiram Tamil
- Advertisement -

உலகில் அனைவருக்குமே ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஒரு சிலருக்கு இன்பமான வாழ்க்கை அமைகிறது. பலருக்கு வாழ்வின் இறுதிவரை கஷ்டங்களை மட்டுமே சந்திக்க நேர்கிறது. தீவிர இறை பக்தி கொண்டவர்களுக்கு வாழ்வில் எத்தகைய கஷ்டங்களையும் சமாளிக்க கூடிய ஆற்றலை அவர்கள் வணங்குகின்ற இறைவனே வழங்குவார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் நமக்கு வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கின்ற பலவகையான துன்பங்கள் தீர நாம் எந்த கடவுளின் மந்திரம் துதிக்க வேண்டும் என்பதையும், அதை எப்படி துதித்தால் முழுமையான பலன்களை பெறலாம் என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலை வேளையில் அருகிலுள்ள நரசிம்மர் கோயிலுக்கு சென்று, நரசிம்மருக்கு புது வஸ்திரம், பழங்கள், மலர்கள், தேங்காய், பசுநெய் ஆகியவற்றை சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி நரசிம்மருக்கு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபடும் சமயத்தில், உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கஷ்டங்கள் குறைகள் குறித்து நரசிம்மரிடம் மானசிகமாக கூறி, அந்த குறைகள் எல்லாம் மிக விரைவில் தீர்ந்து, தங்கள் வாழ்க்கையில் நரசிம்மர் நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு

- Advertisement -

நரசிம்மர் மந்திரம்:
ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

எனும் இந்த மந்திரத்தை அந்த கோயில் சன்னதி வளாகத்தில் அமர்ந்தவரே 18 முறை துதிக்க வேண்டும். இப்படி நரசிம்மர் கோயிலில் வழிபாடு செய்து, வீடு திரும்பிய பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் சிறிய அளவிலான லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, தூபங்கள் கொளுத்தி, நெய் தீபம் ஏற்றி, சிறிதளவு தேன் அல்லது கற்கண்டுகளை நைவேத்தியம் வைத்து மேற்சொன்ன நரசிம்ம மந்திரத்தை 18 முறை துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த நரசிம்மர் மந்திர பாராயணத்தை மேற்கொள்பவர்கள், மந்திரம் துதிக்கும் தினங்களில் புலால் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள் போதும். நீங்கள் தவற விட்ட அனைத்துமே உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

உடல் மற்றும் மன சுத்தியுடன் இந்த நரசிம்மர் மந்திரத்தை தினமும் மேற்கொள்பவர்களுக்கு, நரசிம்மரின் அருட்கடாட்சம் முழுமையாக கிடைக்கும். இதனால் வீட்டில் இருக்கும் துரதிஷ்ட நிலை நீங்கும். தொழில், வியாபாரங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டங்கள் குறைந்து லாபங்கள் ஏற்படும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு அமையும். நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -